மேலும் அறிய

உலக ரத்த தான தினம்: செஞ்சுரியை கடந்தவர் சொல்வது என்ன ?.. ரத்தம் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா ?

World Blood Donor Day: 1989 ஆம் ஆண்டு 100 முறை ரத்த தானம் செய்ததற்காக அப்பொழுதே கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்ததாகவும் கூறுகிறார்.

உலகிலேயே மிகச்சிறந்த தானங்களில் ஒன்றாக ரத்த தானம் இருந்து வருகிறது. ஒருவருடைய உயிரை நாம் காப்பாற்றும் உன்னதமாக ரத்த தானம் திகழ்ந்து வருகிறது. ரத்த தானம் குறித்து அரசும், பல்வேறு தனியார் அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், ரத்த தானம் கொடுப்பதற்கு இப்பொழுதும் தயக்கம் இருக்கத்தான் செய்கின்றன. ரத்தத்தை தானமாக பெற்றவர்கள் கூட, ரத்த தானம் கொடுப்பதற்கு யோசிக்கும் நிலைமை இன்றும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், உலக ரத்த தானம் தினம் ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதிகமான மக்களை ரத்த தானம் செய்ய வலியுறுத்தவும் அனுசரிக்கப்படுகிறது.

உலக ரத்த தானம் தினம்  


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 14ஆம் தேதி உலக ரத்த தானம் தினம் கொண்டாடப்படுகிறது. உலக ரத்த தானம் தினம் 2005 - ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து, ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ரத்த தானம் செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன ?

பொதுவாக ரத்த தானம் செய்வது, ரத்தத்தை பெறுபவர்களுக்கு மட்டும் இல்லாமல் கொடுப்பவர்களுக்கும் நன்மை செய்வதாக ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே ரத்த தானம் கொடுப்பது பிறருக்கு மட்டுமில்லாமல் கொடுக்கும் நமக்கும் நன்மை தருவதால் எந்தவித அச்சமும் இன்றி ரத்தம் தானம் கொடுக்க முன் வரலாம் என்பதே , அறிவியலாளர்களின் கருத்தாக உள்ளது.

ரத்ததானம் கொடுத்தால் மன அழுத்தம் குறையும், உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட உதவும், ரத்த தானம் செய்யும்போது, அதிகப்படியான இரும்புச் சத்தும் ரத்தத்தோடு சேர்ந்து செல்வதால் இரும்புச் சத்து சமன் செய்யப்படுகிறது. பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என கூறுகின்றனர். அதேபோன்று ரத்த தானம் கொடுப்பதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது அறிவியலாளர்களின் கருத்தாக உள்ளது. 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

 ரத்தம் கொடுப்பதில் செஞ்சுரியை கடந்தவர்


அருண் கோகுல்தாஸ் என்பவர் தனது 18 வயதிலிருந்து 80 வயது வரை தொடர்ந்து ரத்த தானம் செய்து வருவதாக தெரிவிக்கிறார். இதுவரை 100க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்திருப்பதாகவும், ரத்த தானம் செய்த தமக்கு இதுவரை எந்தவித பக்க விளைவுகளோ எந்த வித பிரச்சனையும் வந்தது இல்லை எனவும் விவரிக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் நம்மிடம் தெரிவித்ததாவது: 15 வயது இருக்கும் பொழுது தனக்கு ரத்த தானம் செய்ய வேண்டும் என ஆசை வந்ததாகவும், அதற்கு அனுமதி இல்லாததால், தனது 18-வது பிறந்தநாளில் முதல்முறையாக ரத்த தானம் செய்ததாக தெரிவிக்கிறார்.

 


உலக ரத்த தான தினம்: செஞ்சுரியை கடந்தவர் சொல்வது என்ன ?.. ரத்தம் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா ?

வருடத்திற்கு மூன்று முதல் நான்கு முறை ரத்த தானம் செய்து வந்ததாகவும், 1989 ஆம் ஆண்டு 100 முறை ரத்த தானம் செய்ததற்காக அப்பொழுதே கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்ததாகவும் கூறுகிறார். நாம் தொடர்ந்து ரத்த தானம் கொடுத்து வருவதாகவும், இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கிறார் அருண் கோகுல் தாஸ். நாம் ரத்தம் கொடுப்பதால் உயிர் காக்கப்படுவதாகவும், எனவே அனைவரும் தாமாக முன்வந்து ரத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget