கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தென் தமிழகத்திலும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டு்ள்ளது.

கோடை காலம் என்றாலும் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வானிலை நிலவரம் எப்படி உள்ளது? என்பதை கீழே காணலாம்.
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்:
இன்று கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இந்த இரு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை முதல் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டத்திலும் அதிகனமழை வரை பல இடங்களில் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.
மற்ற மாவட்டங்கள் எப்படி?
நாளை மறுநாளான 27ம் தேதி மற்றும் 28ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 35 - 45 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
முன்னெச்சரிக்கை:
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





















