மேலும் அறிய

Sadhguru - Adigalar : 'அவர் என்றும் நினைவில் இருப்பார்' : பங்காரு அடிகளார் மறைவிற்கு சத்குரு இரங்கல்..

Sadhguru: ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவிற்கு சத்குரு இரங்கல் தெரிவித்துள்ளார். 

 மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவிற்கு சத்குரு இரங்கல் தெரிவித்துள்ளார். 

பங்காரு அடிகளார் மறைவு

83 வயதான பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் நேற்று (20.10.2023) காலமானார். ஏராளமான பக்தர்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சத்குரு இரங்கல்

பங்காரு அடிகளார் மறைவிற்கு சத்குரு தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் “ பங்காரு அடிகளாரின் மறைவால் வாடும் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். தமிழ்நாட்டிற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக  என்றும் நினைவில் இருப்பார்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால் - மீனாம்பிகை அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். பங்காரு என்றால் தெலுங்கு மொழியில் தங்கம் என்று பொருள். இவர் ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில் பள்ளி ஆசிரியையான லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர், 1970-களில் சக்தி பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவந்தார். ஆன்மீகத்துடன் சமுதாய தொண்டும் செய்து வந்தார். காஞ்சிபுரத்தில் 1778-ல் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றம் தொடங்கப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட்ட நாடுகளில் இவரை பின்பற்றுபவர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களை பின்பற்றும் பக்தர்கள் பங்காரு அடிகளாரை ‘அம்மா’ என்று அழைப்பது வழக்கம். 

ஆதி பராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் இவர் நடத்தி வருகிறார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழைபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தார்.  அவரது சேவையை பாராட்டி கடந்த 2019 மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

மறைந்த பங்காரு அடிகளார் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மறைந்த பங்காரு அடிகளாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பக்தர்கள் அவரது வீட்டில் மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர்.  


மேலும் வாசிக்க..Bangaru Adigalar Death LIVE: பங்காரு அடிகளார் மறைவு .. மேல்மருவத்தூரில் குவிந்து வரும் பக்தர்கள்.. பலத்த போலீஸ் பாதுகாப்பு

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
Embed widget