மேலும் அறிய

IIT-Madras: ’சென்னை ஐஐடியில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமை’ 45 நாய்கள் உயிரிழப்பு..!

ஏற்கனவே, ஐஐடியில் சாதிய பாகுபாடு, தற்கொலைகள் என பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில், தற்போது ஐஐடி வளாகத்தில் அடைக்கப்பட்ட நாய்களும் உயிரிழந்திருக்கின்றன.

சென்னை ஐஐடி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 45 நாய்கள் உயிரிழந்திருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.IIT-Madras: ’சென்னை ஐஐடியில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமை’ 45 நாய்கள் உயிரிழப்பு..!

கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் அடைத்து வைக்கப்பட்ட186 நாய்களில் 45 நாய்கள், உரிய பராமரிப்பு இன்மை, உணவுத் தரப்பாடாமை, நோய் தொற்று உள்ளிட்ட காரணங்களால் இறந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.  இன பெருக்க அறுவை சிகிச்சை செய்வதாக சொல்லி, ஐஐடி வளாகத்தில் திரிந்த தெருநாய்களை பிடித்து, ஒரே கூண்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக ஐஐடி பதிவாளர் ஜேன் பிரசாத் மற்றும் அவருக்கு துணையாக இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலரான ஹரிஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.IIT-Madras: ’சென்னை ஐஐடியில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமை’ 45 நாய்கள் உயிரிழப்பு..!

சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டிய நாய்களை சட்ட விரோதமாக பிடித்து, கூண்டில் அடைத்து வைத்துள்ள ஐஐடி நிர்வாகத்தினர் மீது மிருகவதை தடை சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் 236 ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ள ஐஐடி வளாகம், அடர்ந்த வனப்பகுதியாக இருக்கிறது. மாநகரின் மத்திய பகுதியில் இதுபோன்றதொரு காடு இருப்பது காற்றில் ஏற்படும் மாசுவை சுத்திகரிக்க பெரிதும் உதவியாகவும், ஆக்சிஜன் பெருக்கியாகவும் இருக்கும் நிலையில், ஐஐடியில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு அங்குள்ளவர்கள் இந்த அடர்ந்த வனப்பகுதியை பயன்படுத்தி வருவதாகவும் தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.IIT-Madras: ’சென்னை ஐஐடியில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமை’ 45 நாய்கள் உயிரிழப்பு..!

இந்நிலையில், வழி தவறி சாலையில் செல்லும் தெரு நாய்கள் ஐஐடி வளாகத்திற்குள் வந்தபின்னர், வெளியே செல்வதற்கான வழி பிடிபடாமல் வளாகத்திற்குள்ளேயே சுற்றி திரியும் நிலை ஏற்படுகிறது. இதனால், மாணவர்களும் ஊழியர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லி, வளாகத்திற்குள் திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து ஒரே கூண்டுக்குள் அடைத்து வைத்து, பல நாட்கள் சித்தரவதை செய்த சம்பவம் தற்போது வெளியே தெரிந்திருக்கிறது.

ஏற்கனவே, ஐஐடியில் சாதிய பாகுபாடு, தற்கொலைகள் என பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில், தற்போது ஐஐடி வளாகத்தில் அடைக்கப்பட்ட நாய்களும் உயிரிழந்திருக்கின்றன.

உயிரோடு இருக்கும் மீதி நாய்களை உடனடியாக அங்கிருந்து மீட்க வேண்டும், நாய்கள் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
Embed widget