ஆசிர்வதிக்கப்பட்ட நாள்! ஈஸ்டர் பண்டிகை! வாழ்த்துகள், புகைப்படங்கள் இங்கே!
இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3வது நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்துவர்கள் நம்புகின்றனர். இதன் நினைவாக உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெறுகிறது.
Wishing everyone a blessed and joyous Easter. This Easter is special because world over, the Jubilee Year is being observed with immense fervour. May this sacred occasion inspire hope, renewal and compassion in every person. May there be joy and harmony all around.
— Narendra Modi (@narendramodi) April 20, 2025
இந்நிலையில் இந்த ஈஸ்டர் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான ஈஸ்டர் வாழ்த்துக்கள். உலகம் முழுவதும், ஜூபிலி ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுவதால் இந்த ஈஸ்டர் சிறப்பு வாய்ந்தது. இந்த புனிதமான சந்தர்ப்பம் ஒவ்வொரு நபரிடமும் நம்பிக்கை, புதுப்பித்தல் மற்றும் இரக்கத்தை ஊக்குவிக்கட்டும். சுற்றிலும் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் நிலவட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 20, 2025
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “இயேசு பிரான் உயிர்த்தெழுந்த திருநாளைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ சொந்தங்களுக்கும் எனது ஈஸ்டர் தின வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் “அன்பு, கருணை, மனித நேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்த இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
இறைமகன் இயேசு உயிர்த்தெழும் பெருநாள்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) April 20, 2025
கிறித்துவ பெருமக்களின் திருநாள்!
“அநீதிக்கு எதிராக இந்த மண்ணுலகில் புரட்சித் தீமூட்ட வந்தேன்; அது எப்பொழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று தம்முடைய அருள் நிறைந்த அறவாழ்வால் வழிகாட்டிய இறைமகன் இயேசு… pic.twitter.com/PAp7scn1oL
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில், “இறைமகன் இயேசு உயிர்த்தெழும் பெருநாள்! கிறித்துவ பெருமக்களின் திருநாள்! “அநீதிக்கு எதிராக இந்த மண்ணுலகில் புரட்சித் தீமூட்ட வந்தேன்; அது எப்பொழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று தம்முடைய அருள் நிறைந்த அறவாழ்வால் வழிகாட்டிய இறைமகன் இயேசு பிரான் உலகம் உய்ய உயிர்த்தெழுந்த திருநாளான ‘உயிர்ப்பு ஞாயிறு’ பெருவிழாவினைக் கொண்டாடும் கிறித்துவப் பெருமக்கள் அனைவரது வாழ்விலும், அறியாமை இருள் அகன்று, கொடிய வறுமை நீங்கி, இறவாத இன்பம் நிறைந்து இறையருள் பெருகட்டும்! இறைமகன் இயேசுவின் அன்பும் - அருளும் இப்பூவுலகில் எல்லா உயிர்களுக்கும் கிடைக்கட்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.

