மேலும் அறிய

‛திருடச் சென்ற இடத்தில் இது தேவையா?’ உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை ரசித்து சிக்கிய திருடன்... சேலத்தில் கலகல!

இதே திருடன், கடந்த 2 மாதத்துக்கு முன்பு சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் திருநங்கை வீட்டில் உள்ளே நுழைந்து தகராறு செய்து அவர்களிடமிருந்து தப்பிக்க மாடி மாடி ஆக ஓடிச்சென்றது தெரியவந்துள்ளது.

திருடச்சென்ற வீட்டுக்குள் பெண்ணை ரசித்துக்கொண்டிருந்த திருடன் வசமாக சிக்கிய பின் வலிப்பு வந்ததுபோல் நாடகமாடி தப்பிக்க முயற்சித்ததும், அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த கலகலப்பு சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் இரயில் நிலையம் அருகில் உள்ள சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் இரவு மின்சாரம் இல்லாததால் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். 

‛திருடச் சென்ற இடத்தில் இது தேவையா?’ உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை ரசித்து சிக்கிய திருடன்... சேலத்தில் கலகல!

அப்போது காற்று வராததால் திடீரென விழித்து பார்த்த போது அருகில் யாரோ ஒருவர் நின்று கொண்டிருப்பது போல இருந்துள்ளது. அதன்பின் திருடன் என்ற சுதாரித்துக் கொண்ட பெண், "திருடன் திருடன்" என்று கூச்சலிட்டு உள்ளார். உடனடியாக வீட்டிலிருந்து வெளியே சென்று தப்பிக்க முயன்றவரை அப்பெண்ணின் கணவர் மற்றும் அருகில் வசிப்பவர்கள் அவரைத் துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர். அவர்களிடம் வசமாக மாட்டிய உடன் வலிப்பு வந்தது போல் நடித்து தப்பிக்க முயன்று உள்ளார். இதனையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

‛திருடச் சென்ற இடத்தில் இது தேவையா?’ உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை ரசித்து சிக்கிய திருடன்... சேலத்தில் கலகல!

இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் கொடுத்ததை அடுத்து அவரைப் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவன் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள நீர் முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்த சின்ராசு என்பதும் அவர் மீது 17 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு, சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் திருநங்கை வீட்டில் உள்ளே நுழைந்து தகராறு செய்து, அவர்களிடமிருந்து தப்பிக்க மாடி மாடி ஆக ஓடிச்சென்று தப்பியுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறையிலிருந்து வந்த சின்ராசு தற்போது மீண்டும் பெண் ஒருவரின் வீட்டுக்குள் சென்று மாட்டிக் கொண்டு வலிப்பு வந்தது போல் நடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சின்ராசவை சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சின்ராசவை சிறையில் அடைத்துள்ளனர். திருடச் சென்ற இடத்தில், பெண்ணின் அழகில் மயங்கி ரசித்து சிக்கிய திருடனின் செயல், அப்பகுதியில் அதிர்ச்சியுடன் கலந்த சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குசேலன் படத்தில் வடிவேலு, தனது மனைவியை ஜன்னலுக்கு வெளியே இருந்து ரசிப்பார். அதைப் பார்த்து போலீஸ் உள்ளிட்ட பலரும் அங்கு கூடுவார்கள். அந்த காட்சியைப் போலவே, திருடச் சென்ற இடத்தில் திருடும் வேலையை பார்க்காமல், பெண்ணை பார்த்து ரசித்து சிக்கிய சம்பவம் , உண்மையில் அபூர்வமானது தான்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய  மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aniket Verma | ”தடைகள் எதையும் மகனே வென்று வா” தாய்க்கு செய்த சத்தியம்! யார் இந்த அனிகேத் வர்மா?ADMK BJP Alliance | ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?செங்கோட்டையனை வைத்து செக்! BACK அடிக்கும் எடப்பாடி | Sengottaiyan | Edappadi Palanisamy | Amishah | Rajiya Sabha SeatSengottaiyan | செங்கோட்டையனுக்கு V. K. Pandian:

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய  மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
Pakistan Earthquake: பாகிஸ்தானில்  திடீர் நிலநடுக்கம்!
Pakistan Earthquake: பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்!
சென்னையில் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வெயில் காலத்தில் ஜில் அப்டேட்! சென்னை மாநகராட்சியின் அசத்தல் ப்ளான்!
சென்னையில் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வெயில் காலத்தில் ஜில் அப்டேட்! சென்னை மாநகராட்சியின் அசத்தல் ப்ளான்!
Nidhi Tewari IFS: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி! யார் இந்த இளம் IFS அதிகாரி?
Nidhi Tewari IFS: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி! யார் இந்த இளம் IFS அதிகாரி?
சினிமா ஆசைகாட்டி வன்கொடுமை...கும்பமேளா வைரல் பெண்ணை வைத்து படம் இயக்கிவந்த இயக்குநர் கைது
சினிமா ஆசைகாட்டி வன்கொடுமை...கும்பமேளா வைரல் பெண்ணை வைத்து படம் இயக்கிவந்த இயக்குநர் கைது
Embed widget