மேலும் அறிய

Pakistan Earthquake: பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்!

Pakistan Earthquake: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் இன்று மாலை 4.40 மணி அளவில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம்  உருவாகியிருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 என பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மியான்மர் நிலநடுக்கம்:

சில தினங்களுக்கு மியான்மரில் அடுத்தடுத்து சில மணி நேரங்களில் 6க்கும் மேற்பட்ட நிலநடுக்கமானது ஏற்பட்டது. சில நேரத்தில்  ரிக்டர் அளவுகோலில் 7.7 என மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால், அந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது அதன் அண்டை நாடுகளான தாய்லாந்து, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. குறிப்பாக,  தாய்லாந்தில் அதன் பாதிப்பும் தீவிரமாக இருப்பதாக தகவல் இருக்கின்றன. 

இந்நிலையில், தற்போது மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஐத் தாண்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இடிபாடுகளில் சிக்கிய கட்டிடங்களில் மேலும் பலரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தருணத்தில் ஒரு வார தேசிய துக்கத்தை மியான்மர் அரசு அறிவித்திருக்கிறது. 


Pakistan Earthquake: பாகிஸ்தானில்  திடீர் நிலநடுக்கம்!

2000ஐ தாண்டிய உயிரிழப்பு:

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட "உயிர் இழப்பு மற்றும் சேதங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக" ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்று ஆளும் இராணுவ ஆட்சிக்குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மூன்றாவது இரவும் மண்டலே முழுவதும் மக்கள் தெருக்களிலேயே தஞ்சமடைந்திருக்கின்றனர். கட்டடங்கள் இடிந்து விழும் என்ற அச்சத்தில் சிறு குழந்தைகள் உட்பட பலர், கட்டிடங்களிலிருந்து விலகி சாலைகளின் நடுவில் போர்வைகளில் படுத்துக் கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை இறப்பு எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 270 பேரை இன்னும் காணவில்லை என்றும் இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.


Pakistan Earthquake: பாகிஸ்தானில்  திடீர் நிலநடுக்கம்!

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் சக்தியால் கட்டுமானத்தில் இருந்த 30 மாடி கோபுரம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மியான்மரின் பெரும்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், பேரழிவின் உண்மையான அளவு இன்னும் வெளிவரவில்லை, மேலும் இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சர்வதேச செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன. 

சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்:

மண்டலேயின் 1,000 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் வெளியே சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் நோயாளிகள் படுக்கை விரிப்புகளில் படுத்துக் கிடந்தனர், அவர்களில் பலர் கடுமையான  வெயிலிலிருந்து பாதுகாக்க ஒரு மெல்லிய தார்ப்பாய் மட்டுமே கட்டப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மியான்மர் மற்று தாய்லாந்தில் மிக கடுமையான பாதிப்பு காரணமாக, மக்கள் மிகுந்த அச்சத்திலும், கவலையிலும் இருக்கின்றன. இந்த தருணத்தில் இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் தேவையான உதவிகளை செய்ய முன்வந்திருக்கிறது. இந்த தருணத்தில், பாகிஸ்தானில் 4.7 என்ற ரிக்டர் அளவு மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில், அங்கு பெரிய பாதிப்பு இல்லையென்றாலும், அங்கு இருக்கும் மக்களுக்கு, சற்று பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: Optical Illusion: சிங்கம் மறைந்திருக்கிறது...30 வினாடிகளில் கண்டுபிடித்தால், நீங்க மாஸ்தான்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
Embed widget