மேலும் அறிய

Crime: நெல்லையில் பயங்கரம்.....மதுபோதையில் நண்பர் வெட்டிக்கொலை...!

தலைமறைவான ராஜா சமீபத்தில்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நெல்லை மாவட்டம்  உவரி  அருகே உள்ள கூட்டப்பனையை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மகன் சுபாஷ் என்ற மணி (26). இவர் மீன் பிடி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் வசித்து வருபவர் டெல்வர் மகன் ராஜா (28). மீனவர். இவர்கள் 2 பேரும் நண்பர்கள் என்பதால் இருவரும் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் நேற்றிரவும்  இருவரும் சேர்ந்து சுபாஷ் என்ற மணியின் வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த சுபாஷ் ராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து கிளம்பிய ராஜா தனது உறவினர்களுடன் அரிவாளுடன் எடுத்துக்கொண்டு மதுபோதையில் இருந்த சுபாஷை  தேடி வந்தார், பின் காட்டுப்பகுதியில் மதுபோதையில் இருந்த சுபாஷை உறவினர்களுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு நேரம் என்பதால்  நடந்த இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் சுபாஷ் ரத்த வெள்ளத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அப்பகுதியினர் உவரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவர்கள் உவரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல் ஆய்வாளர் பிரேமா தலைமையில் உதவி காவல் ஆய்வாளர்  முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள ராஜா மற்றும் அவரது உறவினர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும் காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட சுபாஷுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்றும் நேற்று முன்தினம் அவர்கள் திசையன்விளை அருகே உள்ள வெம்மணங்குடியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது ராஜாவுடன் சேர்ந்து சுபாஷ் தனது வீட்டின் அருகிலேயே காட்டுப்பகுதியில் வைத்து மது அருந்தி உள்ளனர். அப்போது மதுபோதையில் ராஜாவின் மனைவியை சுபாஷ் அவதூறாக பேசியதாகவும், அதன் காரணமாக அவரை ராஜா கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தலைமறைவான ராஜா சமீபத்தில்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  நெல்லையில் மது போதையில் நண்பரையே வெட்டி கொலை செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Embed widget