Budget 2024 LIVE Updates: ஆந்திர மாநிலத்தின் தேவைகளை அறிந்து பட்ஜெட்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு
Union Budget 2024 LIVE Updates: தேர்தல் காரணமாக பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கலான நிலையில், இன்று முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
LIVE

Background
ஆந்திர மாநிலத்தின் தேவைகளை அறிந்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் - பிரதமருக்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநிலத்தின் தேவைகளை அறிந்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் - பிரதமருக்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு
”மத்திய அரசை தற்காத்துக் கொள்ளும் அரசியல் பட்ஜெட்" -தமிமுன் அன்சாரி
"இது வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை. மத்திய அரசை தற்காத்துக் கொள்ளும் அரசியல் பட்ஜெட்" -தமிமுன் அன்சாரி, மஜக தலைவர்
பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அசாம், இமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் வெள்ள தடுப்பு பணிகளுக்காக 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை குறை கூறவில்லை. ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு வெள்ளத்தால் இதே அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதற்கு ஏன் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை? என்ற கேள்வி எழுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அடுத்த சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கென சிறப்பு திட்டங்கள் ஏதுமில்லை. ஏற்கனவே கடந்த கால பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படாத நிலையில், இந்த புதிய பட்ஜெட் எதை சாதிக்கப் போகிறது? என்கிற கேள்வி எழுகிறது. -தமிமுன் அன்சாரி, மஜக தலைவர்
“மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை காற்று ஊதப்பட்ட பலூன் போன்றது” -ஜவாஹிருல்லா எம்எல்ஏ
“மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை காற்று ஊதப்பட்ட பலூன் போன்றது” -ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மமக மாநிலத் தலைவர்
தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகளின் தயவோடு நடத்தப்படும் ஆட்சி என்பனால், பீகாருக்கும் ஆந்திரப் பிரதேசத்துக்கும் சிறப்புத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு அரசின் முக்கியக் கோரிக்கைகளான வெள்ள நிவாரண நிதி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் சொல்லப்படவில்லை. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முறையாக நடத்தாமல் போதிய புள்ளிவிவரங்கள் இல்லாமல் வெறும் கற்பனை விவரங்களைச் சொல்லி மக்களை ஏமாற்ற ஒன்றிய அரசு முயல்கிறது. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை காற்று ஊதப்பட்ட பலூன் போன்றதுதான் -ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மமக மாநிலத் தலைவர்
"தமிழக மக்களின் நலனை புறக்கணிக்கிறார்": முதல்வரை விமர்சிக்கும் தமிழிசை சௌந்தரராஜன்
"நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழக நலனை மட்டுமல்ல, தமிழக மக்களின் நலனையும் அவர் புறக்கணிக்கிறார்" -முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் எதுவும் இல்லாமல் நிதிநிலை அறிக்கை: வேல்முருகன் எம்.எல்.ஏ
“தமிழ்நாட்டுக்கான சிறப்பு திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத மத்திய அரசின் 2024-25 ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை; தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் வரியை வாங்கிச் செல்லும் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் எதுவும் இல்லாமல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது” - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அறிக்கை
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

