IPL 2025 Rules: அதெல்லாம் முடியவே முடியாது..! ஐபிஎல், வீரர்களுக்கு பிசிசிஐ விடுத்த கடும் கட்டுப்பாடுகள்
IPL 2025 Rules: நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

IPL 2025 Rules: ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னும் பின்னும் வீரர்கள் அணி பேருந்தில் பயணிப்பதை வாரியம் கட்டாயமாக்கியுள்ளது.
ஐபிஎல் விதிகள்:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), நடப்பாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025-க்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வீரர்கள் குடும்ப உறுப்பினர்களை டிரஸ்ஸிங் அறைக்குள் அழைத்து வருவதைத் தடைசெய்துள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கையின்படி, இந்த நடவடிக்கை ஒழுக்கத்தையும் அணி ஒற்றுமையையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
பிசிசிஐ அதிரடி:
ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பும், போட்டிகளின் போதும் வீரர்கள் அணி பேருந்தில் பயணிக்க வேண்டும் என்பதை வாரியம் கட்டாயமாக்கியுள்ளது. இது ஏற்கனவே சர்வதேச போட்டிகளின் போது இந்திய அணிக்கு அமல்படுத்தப்பட்ட ஒரு விதியாகும். வீரர்கள் இந்த வழிகாட்டுதலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், எந்த விதிவிலக்கும் அனுமதிக்கப்படாது. "பயிற்சிக்காக வீரர்கள் வரும்போது அணி பேருந்தைப் பயன்படுத்த வேண்டும். அணிகள் இரண்டு தொகுதிகளாக பயணிக்கலாம்" என்றும் புதிய விதிகள் கூறுவதாக கூறப்படுகிறது.
புதிய விதிகளின் கீழ், வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் துணை ஊழியர்கள் பயிற்சி நாட்களில் கூட, வீரர் மற்றும் போட்டி அதிகாரிகள் பகுதிகளுக்குள் (டிரஸ்ஸிங் ரூம்) நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. போட்டி நாட்களின்போது மட்டும் இந்த கட்டுப்பாடு ஏற்கனவே அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், "பயிற்சி நாட்களில் (போட்டிக்கு முந்தைய மற்றும் போட்டிகளின் போது), அங்கீகாரம் பெற்ற ஊழியர்கள் மட்டுமே டிரஸ்ஸிங் ரூமிலும் விளையாட்டு மைதானத்திலும் அனுமதிக்கப்படுவார்கள்.
குடும்பங்களுக்கு எப்படி அனுமதி?
தகவல்களின்படி, "வீரர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வேறு வாகனத்தில் பயணம் செய்து, விருந்தோம்பல் பகுதியில் இருந்து அணி பயிற்சியைப் பார்க்கலாம். நீட்டிக்கப்பட்ட துணை ஊழியர்களுக்கான (த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட்/நெட் பவுலர்கள்) பட்டியலை BCCI-யிடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்டதும், போட்டி அல்லாத நாள் அங்கீகாரங்கள் அதற்கானவை வழங்கப்படும்," என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு, பிரதான மைதானத்தில் வீரரின் உடற்தகுதியை மதிப்பிடுவதற்கு பிசியோக்கள் இப்போது தடைசெய்யப்பட்டுள்ளனர். வீரர்கள் குறைந்தது இரண்டு ஓவர்களுக்கு ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பிகளை அணிய வேண்டும், மேலும் போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாக்களின் போது ஸ்லீவ்லெஸ் ஜெர்சிகள் அனுமதிக்கப்படாது.
முக்கிய கட்டுப்பாடுகள்:
- வீரர்கள் சமையல்காரர்கள், உதவியாளர்கள் அல்லது சிகை அலங்கார நிபுணர்கள் போன்ற தனிப்பட்ட ஊழியர்களை அழைத்து வர முடியாது.
- குடும்ப உறுப்பினர்கள் 45 நாட்களுக்குக் குறைவான சுற்றுப்பயணங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.
- நீண்ட சுற்றுப்பயணங்களில் (45 நாட்களுக்கு மேல்), வீரர்கள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க ஒரு நியமிக்கப்பட்ட வாய்ப்பு கிடைக்கும்.

