மேலும் அறிய

மரக்காணம் பறவைகள் சரணாலயம் சுற்றுலா தலமாக மாற்றப்படும் - அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

விழுப்புரம்: மரக்காணம் பறவைகள் சரணாலயம் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வண்டிபாளையம் கழுவெளி பறவைகள் சரணாலயம் அமைய உள்ள பகுதியில் வனத்துறை சார்பில் காடுகள் வளர்த்தல் போன்ற முதல் கட்ட பணிகளை செய்து வருகின்றனர். இங்கு நடைபெற்று வரும் பணிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களை காத்திடும் பொருட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பசுமைத் தமிழகம் திட்டம் ஒன்றாகும். அதேபோல் விலங்கினங்கள் மற்றும் பறவை இனங்களை காத்திடும் பொருட்டு வனவிலங்கு சரணாலயங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் சதுப்பு நிலம் அமைந்துள்ள பகுதிகளில் புதிய பறவைகள் சரணாலங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் மரக்காணம் வட்டங்களில் கழுவெளி அமைந்துள்ளது.

இது உவர் நீர் சதுப்பு நிலமாகும். 160க்கும் மேற்பட்ட சிறு நீர்ப்பாசன குளங்களிலிருந்து கழுவெளி வழியாக கடலுக்குச் செல்கிறது. இச்சதுப்பு நிலம் 73.01 சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972 பிரிவு - 1ன்கீழ் 5151.60.0 ஹெக்டேர் பரப்பளவில் கழுவெளி சதுப்பு நிலம் அமையப்பெற்றுள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய சதுப்பு நிலங்களின் பட்டியலில் ஒன்றாக கழுவெளி சதுப்பு நிலம் உள்ளது.

தமிழகத்தில் 16-வது பறவைகள் சரணாலயமாக கழுவெளி பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சரணாலயத்தை மேம்படுத்திடும் பொருட்டும் பாதுகாத்திடும்

பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இமயமலை மற்றும் ஆசிய கண்டங்களிலிருந்து வரும் பறவை இனங்கள் இங்கு தங்கி டிசம்பர் - மார்ச் மாத கால இடைவெளிகளில் முட்டையிட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இச்சரணாலயம் 200 க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு தாயகமாக உள்ளது. மேலும் 40,000 எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு முக்கியமான தங்குமிடமாகவும் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது. கழுவெளி பகுதியானது பறவைகளுக்கு ஏற்றதான காலநிலை உணவு ஆகிய இந்த இடத்தில் சரியாக அமைந்துவிடுகின்றன. அதேபோல் கழுவெளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரி குளம் குட்டை இருக்கிறது.

மழை நேரத்தில் அவை நிரம்பினால் அந்த தண்ணீர் கழுவெளிக்கு தான் வருகிறது. அங்கிருந்து கடலுக்கு செல்கிறது. இந்த கழுவெளி பகுதியை ஒட்டியபடி விவசாய நிலங்கள் அதிகப்படியாக உள்ளது. இங்கு வரும் பறவைகள் விவசாய நிலங்களில் காணப்படும் தீமை தரக்கூடிய பூச்சி மற்றும் புழுக்களை சாப்பிட்டு விடும். மேலும் பறவைகளின் எச்சம் மிகப்பெரிய உரமாக தாவரங்களுக்கு அமைகிறது. மேலும் இச்சரணாலயத்தை பாதுகாத்திடும் வகையிலும் விரிவுபடுத்திடும் வகையிலம் மத்திய அரசிடமிருந்து நிதிஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. வரப்பெற்றவுடன் பெரிய அளவிலான பறவைகள் சரணலாயமாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இதுமட்டுமல்லாமல் இப்பகுதியினை காத்திடும் பொருட்டு கழுவெளியிலிருந்து நீரினை எடுப்பது, கழிவுநீரினை இப்பகுதியில் விடுவது போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் பறவைகள் வேட்டையாடுவதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இச்சரணாலயத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இச்சரணாலயத்தை பெரிய அளவில் மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்தலமாக மாறும் அதன் மூலம் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் காக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.