மேலும் அறிய
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்பி கொண்டுள்ளார். தவறான தகவல்களை பேசிக்கொண்டுள்ளார். - எல்.முருகன் பேட்டி.

எல்.முருகன் பேட்டி
Source : whats app
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை? ஆரம்பக்கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்; மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போ அவர் கூறுகையில்...,” மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதுமாக நடந்து வருகிறது. இந்த பட்ஜெட் 2047 ஆண்டுக்கு அடித்தள மிட்டுள்ள பட்ஜெட்தொலை நோக்கு பார்வையுடன் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கான இந்தியா வல்லரசு நாடாக அடித்தளமாக உள்ள பட்ஜெட். தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டின் மேல் பிரதமர் மிகுந்த பற்று வைத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்பி கொண்டுள்ளார். தவறான தகவல்களை பேசிக்கொண்டுள்ளார்.
தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்
மத்திய கல்வித்துறை அமைச்சர் மிக தெளிவாக சொல்லி உள்ளார். பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டார்கள். திரும்ப பின் வாங்கிவிட்டார்கள். நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதாக தர்மேந்திர பிரதான் என்னிடம் சொன்னார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை? ஆரம்பக்கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர்களின் ஆலோசனைப் படி உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை.
தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்
இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம். 1965 ஆம் ஆண்டு இருந்ததை போல இப்போது நாடு இல்லை. மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை. வெற்றிவேல் யாத்திரை நான் நடத்தினேன். நான் திருப்பரங்குன்றம் செல்வதில் எந்த அரசியலும் இல்லை. சர்ச்சையும் இல்லை நான் என் வழிபாட்டு உரிமை அடிப்படையில் செல்கிறேன். கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளை தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும் என பேசினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 250 ஆண்டுகால ஆச்சரியம்.. சிவகங்கையின் 2-வது மன்னர் பெயர் பொறித்த கல்வெட்டு கண்டெடுப்பு !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion