மேலும் அறிய

Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!

மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் மும்மொழிக் கொள்கையை திணிப்பதில் உறுதியாக இருக்கிறது என்பதைத்தான் மத்திய கல்வியமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன- அன்புமணி.

தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கக்கூடாது: மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’அரசுப் பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கும் தேசியக் கல்விக் கொள்கையை  ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுகள் தனிக்கொள்கையை கடைபிடிக்க வகை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாறாக தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதை மத்திய அரசு தவிர்த்திருக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழக அரசு திறக்க வேண்டும்; அவற்றில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க தமிழக அரசு மறுத்து விட்டதால், ஒருங்கிணைந்தக் கல்வித் திட்டத்தின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2,401 கோடி நிதியை வழங்காமல் பல மாதங்களாக மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறது. புதியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதைக் காரணம் காட்டி மத்திய அரசு நிதியை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என்று பல  தருணங்களில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதிபட தெரிவித்திருக்கிறது.

மும்மொழித் திணிப்பு என்ற போர்

ஆனால், மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் மும்மொழிக் கொள்கையை திணிப்பதில் உறுதியாக இருக்கிறது என்பதைத்தான் மத்திய கல்வியமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன. மும்மொழித் திணிப்பு என்ற போர் தமிழகத்தின் மீது 80 ஆண்டுகளுக்கு மேலாக தொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் போரில் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டு மக்கள்தான் வென்று வருகின்றனர்.

1963ஆம் ஆண்டில் இந்தித் திணிப்பு குறித்த சர்ச்சை எழுந்தபோது, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே அலுவல் மொழியாக நீடிக்கும்; இந்தி திணிக்கப்படாது என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதை மீறும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

பொதுப்பட்டியலில் கல்வி இருக்கும் நிலையில், தேசிய அளவிலான கல்விக் கொள்கையை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளதோ, அதே அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. அதன்படி கடந்த காலங்களில் பல மாநிலங்கள் தங்களுக்கென்று தனிக் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தி உள்ளன. இப்போதும் கூட தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கையை வகுத்து இன்னும் செயலாக்கம் செய்யாமல் வைத்திருக்கிறது. இது மாநில அரசின் உரிமை. இதை மத்திய அரசு மதிக்க வேண்டும்.

மத்திய அரசு குழம்பிக்கொள்ளக் கூடாது

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அந்த நிதி தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்குத்தானே தவிர, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்காகவோ, முன்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகவோ  வழங்கப்படும் வெகுமதி அல்ல. அதனால், தேசியக் கல்விக் கொள்கையையும், தமிழ்நாட்டிற்கான நிதியையும்  இணைத்து மத்திய அரசு குழம்பிக்கொள்ளக் கூடாது.

மத்திய அரசு நிதி ஒதுக்காததால், அரசு பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல்  கிடக்கின்றன. எனவே, நியாயத்தையும், மாநில அரசின் உரிமைகளையும் மதித்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஒபிஎஸ்-ஸின் கடைசி நம்பிக்கையும் ஓவர்..! ஆதரவாளர்கள் கூடாரம் காலி - இன்று திமுகவில் இணையும் எம்.எல்.ஏ.,?
ஒபிஎஸ்-ஸின் கடைசி நம்பிக்கையும் ஓவர்..! ஆதரவாளர்கள் கூடாரம் காலி - இன்று திமுகவில் இணையும் எம்.எல்.ஏ.,?
Sunita Williams: போதும்டா..! 27 வருடங்கள், 3 மிஷன்கள், வானில் 608 நாட்கள் - ஓய்வை அறிவித்த சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams: போதும்டா..! 27 வருடங்கள், 3 மிஷன்கள், வானில் 608 நாட்கள் - ஓய்வை அறிவித்த சுனிதா வில்லியம்ஸ்
IND Vs NZ 1st T20I: நியூசிலாந்தை இன்று பழிவாங்குமா இந்தியா? டி20 மட்டும் தான் பாக்கி..! ஸ்கை சாதிப்பாரா?
IND Vs NZ 1st T20I: நியூசிலாந்தை இன்று பழிவாங்குமா இந்தியா? டி20 மட்டும் தான் பாக்கி..! ஸ்கை சாதிப்பாரா?
கிளாம்பாக்கம் ஸ்கைவாக்: பயணிகள் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரும்! திறப்பு எப்போது? முழு தகவல்!
கிளாம்பாக்கம் ஸ்கைவாக்: பயணிகள் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரும்! திறப்பு எப்போது? முழு தகவல்!
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒபிஎஸ்-ஸின் கடைசி நம்பிக்கையும் ஓவர்..! ஆதரவாளர்கள் கூடாரம் காலி - இன்று திமுகவில் இணையும் எம்.எல்.ஏ.,?
ஒபிஎஸ்-ஸின் கடைசி நம்பிக்கையும் ஓவர்..! ஆதரவாளர்கள் கூடாரம் காலி - இன்று திமுகவில் இணையும் எம்.எல்.ஏ.,?
Sunita Williams: போதும்டா..! 27 வருடங்கள், 3 மிஷன்கள், வானில் 608 நாட்கள் - ஓய்வை அறிவித்த சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams: போதும்டா..! 27 வருடங்கள், 3 மிஷன்கள், வானில் 608 நாட்கள் - ஓய்வை அறிவித்த சுனிதா வில்லியம்ஸ்
IND Vs NZ 1st T20I: நியூசிலாந்தை இன்று பழிவாங்குமா இந்தியா? டி20 மட்டும் தான் பாக்கி..! ஸ்கை சாதிப்பாரா?
IND Vs NZ 1st T20I: நியூசிலாந்தை இன்று பழிவாங்குமா இந்தியா? டி20 மட்டும் தான் பாக்கி..! ஸ்கை சாதிப்பாரா?
கிளாம்பாக்கம் ஸ்கைவாக்: பயணிகள் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரும்! திறப்பு எப்போது? முழு தகவல்!
கிளாம்பாக்கம் ஸ்கைவாக்: பயணிகள் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரும்! திறப்பு எப்போது? முழு தகவல்!
Skoda Kylaq: கைலாக்கில் சர்ப்ரைஸ் அப்டேட்கள்..! புதிய வேரியண்ட்கள், கம்மி விலை, ப்ரீமியம் அம்சங்கள் - காம்பேக்ட் SUV
Skoda Kylaq: கைலாக்கில் சர்ப்ரைஸ் அப்டேட்கள்..! புதிய வேரியண்ட்கள், கம்மி விலை, ப்ரீமியம் அம்சங்கள் - காம்பேக்ட் SUV
JOB ALERT: இன்டர்வியூக்கு வந்தாலே போதும்... 20 ஆயிரம் இளைஞர்களுக்கு அசத்தல் சான்ஸ்- வெளியான அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்... 20 ஆயிரம் இளைஞர்களுக்கு அசத்தல் சான்ஸ்- வெளியான அறிவிப்பு
Parasakthi: பராசக்தி ரூ.100 கோடி வசூல்.. வாயில வடை சுடாதீங்க.. நெட்டிசன்கள் கிண்டல்!
Parasakthi: பராசக்தி ரூ.100 கோடி வசூல்.. வாயில வடை சுடாதீங்க.. நெட்டிசன்கள் கிண்டல்!
காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்.. தெரு நாய் கடித்ததால் சிறுவன் உயிரிழப்பு..‌ தொடரும் சோகம்..
காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்.. தெரு நாய் கடித்ததால் சிறுவன் உயிரிழப்பு..‌ தொடரும் சோகம்..
Embed widget