மேலும் அறிய

ஜில்லுன்னு சம்மர் மழை போல அரசின் அறிவிப்பு... திருச்சி மக்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

வரும் மூன்று மாதங்களில் கட்டுமானப் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால் திருச்சி மக்கள் ஜில்லுன்னு ஐஸ்கிரீம் சாப்பிட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்

திருச்சி: வருது... வருது... நான்கு வழிப்பாதை பாலம் வருது. எங்கு தெரியுங்களா? இந்த அறிவிப்பால் குளிர்ச்சியாக கூல்டிரிங்க்ஸ் சாப்பிட்டது போல் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் திருச்சி மக்கள்.

திருச்சி மாநகரில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே கோரையாற்றின் குறுக்கே உள்ள குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு, ரூ.30 கோடி செலவில் நான்கு வழிப்பாதை பாலம் கட்ட அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் மக்கள் கோடை காலத்தில் ஜில்லுன்னு பெய்யும் மழையால் ஏற்படும் குளிர்ச்சி அனுபவிப்பது போல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகில்தான் இந்த பாலம் கட்டப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் வரும் மூன்று மாதங்களில் கட்டுமானப் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால் திருச்சி மக்கள் ஜில்லுன்னு ஐஸ்கிரீம் சாப்பிட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்

திருச்சி மாநகரத்தின் முக்கிய சாலையான திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH) இந்த பாலம் அமைந்துள்ளது. கிராஃபோர்ட் சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணி நவம்பர் 2024-ல் முடிவடைந்தது. ஆனால், கோரையாறு குறுக்கே உள்ள இந்த குறுகிய பாலம் மட்டும் அப்படியே இருந்தது.

தற்போது, அந்த பாலத்தையும் அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இந்த சாலை, திருச்சி நகர்ப்புற சாலை (SHU 132) என்று அழைக்கப்படுகிறது. இது பழைய NH 45 சாலையின் ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கரூர்மண்டபம்,  எடமலைப்பட்டிபுதூர் மற்றும் கிராஃபோர்ட் பகுதிகளை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கிறது.

இந்நிலையல் சட்டமன்ற கூட்டத்தில், புதிய கோரையாறு பாலம் கட்ட அரசு ரூ.30 கோடி ஒதுக்கி அறிவித்துள்ளது. "SHU 132, மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து IBT-க்கு செல்லும் மக்களுக்கு முக்கியமான இணைப்புச் சாலையாக இருக்கும். பாலத்தின் வேலையை ஒரு வருடத்தில் முடிப்போம்" என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

அதாவது, இந்த சாலை வழியாக ஐபிடி பேருந்து நிலையத்திற்கு எளிதாக செல்ல முடியும். தற்போதுள்ள பாலம் 9 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. இதை இடித்துவிட்டு, நடைபாதைகள் உட்பட 20 மீட்டர் அகலத்தில் நான்கு வழிப்பாதை பாலம் கட்டப்பட உள்ளது. 1.6 கி.மீ நீளமுள்ள சாலையில், கோரையாறு பாலத்தின் அருகே மட்டும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. புதிய பாலம் கட்டப்பட்டால் ஐபிடி மற்றும் மத்திய பேருந்து நிலையத்திற்கு இடையே செல்லும் பேருந்துகளும் இந்த பாலத்தை பயன்படுத்த எளிதாக இருக்கும்.

புதிய பாலம் மற்றும் SHU 132 சாலையை விரிவுபடுத்திய பிறகு, மாநகராட்சி கோரையாற்றின் கரையில் புதிய இணைப்புச் சாலை அமைக்க உள்ளது. இது ஐபிடியை திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும். இந்த சாலை பாலத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில் இருக்கும். இதன் மூலம் ஐபிடி பேருந்து நிலையத்திற்கு செல்ல பல வழிகள் உருவாகும். இதனால், போக்குவரத்து நெரிசல் குறையும். நேரமும் விரயமாகாது. இதனால் மக்கள் இந்த நான்கு வழி பாதை பாலம் எப்போது தொடங்கப்படும் என்று வெகு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இப்படி புதுசு புதுசா அறிவிப்புகள் வந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் திருச்சி மக்கள் ஹேப்பி அண்ணாச்சி.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Election Commission: பாஜகவை போன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம் - ”அம்மா, பொண்ணோட வீடியோ கொடுக்கணுமா”
Election Commission: பாஜகவை போன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம் - ”அம்மா, பொண்ணோட வீடியோ கொடுக்கணுமா”
Coolie Box Office Collection: தியேட்டரில் கூலி சேர் காலி... நாளுக்கு நாள் சரியும் வசூல் - 4 நாள் எவ்வளவு?
Coolie Box Office Collection: தியேட்டரில் கூலி சேர் காலி... நாளுக்கு நாள் சரியும் வசூல் - 4 நாள் எவ்வளவு?
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
செவ்வாய் தோஷ ஜாதகர்கள் சுத்த ஜாதகத்தோடு இணைக்கலாமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு
TVK Maanadu Madurai | ட்ரோன் மூலம் மருந்துகள் TVK மாநாட்டில் புது ஐடியா அசந்து போன தொண்டர்கள்! Vijay
BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Commission: பாஜகவை போன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம் - ”அம்மா, பொண்ணோட வீடியோ கொடுக்கணுமா”
Election Commission: பாஜகவை போன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம் - ”அம்மா, பொண்ணோட வீடியோ கொடுக்கணுமா”
Coolie Box Office Collection: தியேட்டரில் கூலி சேர் காலி... நாளுக்கு நாள் சரியும் வசூல் - 4 நாள் எவ்வளவு?
Coolie Box Office Collection: தியேட்டரில் கூலி சேர் காலி... நாளுக்கு நாள் சரியும் வசூல் - 4 நாள் எவ்வளவு?
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
செவ்வாய் தோஷ ஜாதகர்கள் சுத்த ஜாதகத்தோடு இணைக்கலாமா..?
Zelensky Vs Trump: உஷார் தான்.! ட்ரம்ப்பை சந்திக்க துணையுடன் வரும் ஜெலன்ஸ்கி; போன தடவை மாதிரி ஆகிடக் கூடாதுல்ல.?!
உஷார் தான்.! ட்ரம்ப்பை சந்திக்க துணையுடன் வரும் ஜெலன்ஸ்கி; போன தடவை மாதிரி ஆகிடக் கூடாதுல்ல.?!
நீங்களே பார்க்கலாம்
Easy-யா நீங்களே பார்க்கலாம் "திருமண பொருத்தம்"...!!!
Donald Trump: இந்தியா என்ன ஊறுகாயா.? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுபடியும் என்ன சொல்லி வச்சுருக்கார் பாருங்க
இந்தியா என்ன ஊறுகாயா.? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுபடியும் என்ன சொல்லி வச்சுருக்கார் பாருங்க
மன்னிக்க முடியாத செயல்.. அன்புமணிக்கு எதிராக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை - இத்தனை குற்றச்சாட்டா?
மன்னிக்க முடியாத செயல்.. அன்புமணிக்கு எதிராக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை - இத்தனை குற்றச்சாட்டா?
Embed widget