மேலும் அறிய

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் - அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

சென்னைக்கு நிகராக திருச்சியை உருவாக்க வேண்டும், என்று பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி திருச்சி மாவட்டத்தை பெரும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என திட்டங்கள் வகுத்து தற்போது நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க  நிதி ஒதுக்கீடு செய்து மொத்தம் 350 கோடி ரூபாய்  செய்தது தமிழ்நாடு அரசு. இதில் பேருந்து முனையம் 159 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டு வந்தது. மேலும் தேவைக்கு ஏற்ப நிதியும் கூடுதலாக கேட்டு பெறுவோம் என அமைச்சர் கே.நேரு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 


திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர்  - அமைச்சர் கே.என்.நேரு

பஞ்சப்பூர் பேருந்து முனையம் 85 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது

மேலும், பேருந்து நிறுத்துமிடம் நான்கிலும் சுமார் 404 பேருந்துகளை நிறுத்துவதற்கு வசதி உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தரைத்தளம் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. முதல் தளம் உள்ளூர் பேருந்துகளுக்காகவும், தரைத்தளம் வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.

இந்த இரண்டு தளங்களும் 2 எஸ்கலேட்டர் மற்றும் 3 எலிவேட்டர்களை கொண்டதாக கட்டப்படுகிறது. 404 பேருந்துகளை தவிர 124 இடங்கள் உடனடியாக வெளியே செல்வதற்கு தனியாக அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் 142 பேருந்து நிறுத்தங்கள் நீண்ட தூர பயண பேருந்துகள் நிறுத்துவதற்கும், 78 பேருந்து நிறுத்தங்கள் குறுகிய தூர பயணத்திற்கு செல்லும் பேருந்துகளுக்கு அமைக்கப்பட்டுள்ளது. நகரப்பேருந்துகள் 60 இடங்களில் நிற்கும் வகையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது சுமார் 85 சதவீத பணிகள் நடைபெற்று முடிந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் சென்னையில் அண்மையில் திறக்கபட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்று விமர்சனம் எதுவும் வரகூடாது. 


திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர்  - அமைச்சர் கே.என்.நேரு

பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு - முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்படும்.

ஆகையால் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் அனைத்தும் தரமாக இருக்க வேண்டும். தரம் இல்லாமல் பணிகளை மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சியை, சென்னைக்கு நிகராக மாற்றுவதில் இந்த திட்டம் மிக முக்கியமானது என அதிகாரிகள் தரப்பில் தகவல் கூறினர். இந்நிலையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் கே. என். நேரு தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும். மிக உயரமான கருணாநிதி சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரிடம் இதுகுறித்து பரிந்துரை செய்யப்பட்டு விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வெற்றிகரமான தமிழக மாடலை சிதைப்பதா? மத்திய கல்வி அமைச்சரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய அன்பில்!
வெற்றிகரமான தமிழக மாடலை சிதைப்பதா? மத்திய கல்வி அமைச்சரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய அன்பில்!
EPS Vs BJP: “நான் தலைவராகுறது உங்க கைல தான் அண்ணே இருக்கு“ இபிஎஸ்ஸிடம் தஞ்சமடைந்த பாஜக முக்கிய புள்ளி...
“நான் தலைவராகுறது உங்க கைல தான் அண்ணே இருக்கு“ இபிஎஸ்ஸிடம் தஞ்சமடைந்த பாஜக முக்கிய புள்ளி...
அரசியல் செய்வதில்தான் திமுக தீவிரம்; அரசு பள்ளிகளின் இணைய கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்தணுமா? ராமதாஸ் சாடல்!
அரசியல் செய்வதில்தான் திமுக தீவிரம்; அரசு பள்ளிகளின் இணைய கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்தணுமா? ராமதாஸ் சாடல்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெற்றிகரமான தமிழக மாடலை சிதைப்பதா? மத்திய கல்வி அமைச்சரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய அன்பில்!
வெற்றிகரமான தமிழக மாடலை சிதைப்பதா? மத்திய கல்வி அமைச்சரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய அன்பில்!
EPS Vs BJP: “நான் தலைவராகுறது உங்க கைல தான் அண்ணே இருக்கு“ இபிஎஸ்ஸிடம் தஞ்சமடைந்த பாஜக முக்கிய புள்ளி...
“நான் தலைவராகுறது உங்க கைல தான் அண்ணே இருக்கு“ இபிஎஸ்ஸிடம் தஞ்சமடைந்த பாஜக முக்கிய புள்ளி...
அரசியல் செய்வதில்தான் திமுக தீவிரம்; அரசு பள்ளிகளின் இணைய கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்தணுமா? ராமதாஸ் சாடல்!
அரசியல் செய்வதில்தான் திமுக தீவிரம்; அரசு பள்ளிகளின் இணைய கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்தணுமா? ராமதாஸ் சாடல்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
Thiruvannamalai: பெளர்ணமி; திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகள்! பக்தர்களுக்காக நாளை ஏற்பாடு!
Thiruvannamalai: பெளர்ணமி; திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகள்! பக்தர்களுக்காக நாளை ஏற்பாடு!
Tamilnadu Roundup: இன்றும் தொடரும் மழை! திருவள்ளூரில் மு.க.ஸ்டாலின் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: இன்றும் தொடரும் மழை! திருவள்ளூரில் மு.க.ஸ்டாலின் - தமிழகத்தில் இதுவரை
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.