மேலும் அறிய

கன்னூர் சிறையில் பரபரப்பு! ஆயுள் தண்டனை கைதி கோவிந்தசாமி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை

ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை வெளியே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, கன்னூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது எப்படி என்று தெரியாமல், சிறைத் துறை அதிர்ச்சியில் உள்ளது.

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை வெளியே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, கன்னூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது எப்படி என்று தெரியாமல், சிறைத் துறை அதிர்ச்சியில் உள்ளது.


கன்னூர் சிறையில் பரபரப்பு! ஆயுள் தண்டனை கைதி கோவிந்தசாமி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை

கன்னூர் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய குற்றவாளி கோவிந்தசாமி, கன்னூர் மாவட்டம் தலப்பு பகுதியில் இருந்த காலி மனையில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறைச்சாலையிலிருந்து, கைதி கோவிந்தசாமி அதிகாலை 4.15 மணியிலிருந்து 6.30 மணிக்குள் தப்பிச் சென்றிருக்கவேண்டும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலையில், சிறை அறைகளை, சிறைத்துறை பயிற்சி அதிகாரிகள் சோதனையிட்டபோதுதான், கோவிந்தசாமி தப்பியோடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையின் சுற்றுச் சுவரில், கோவிந்தசாமியின் உடைகள் தொடங்கிக் கொண்டிருந்ததால், அந்த வழியாக அவர் தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில், அருகே இருந்த தேசிய நெடுஞ்சாலையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. கோவிந்தசாமி, சிறிய ரக கத்தியைக் கொண்டு, சிறைக் கதவின் கம்பிகளை அறுத்திருப்பதும், உடை மற்றும் போர்வையை கயிறாக மாற்றி சுவர் ஏறிக் குதித்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் வெளியாகியிருக்கிறது.

கேரள மாநிலம் கன்னூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவிந்தசாமி என்கிற சார்லே தாமஸ், வெள்ளிக்கிழமை அதிகாலை, தன்னுடைய அறையிலிருந்து காணாமல் போனார். தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த 49 வயது கோவிந்தசாமி, கேரளத்தின் மிக பயங்கர பாலியல் வன்கொடுமை, கொலையில் ஈடுபட்ட நபராக உள்ளார். 2011ஆம் ஆண்டு, 23 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த நிலையில், தப்பியோடியது, நேற்று கன்னூர் சிறைச்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், சிறைச்சாலைக்கு அருகே, காலி மனை ஒன்றில், இருந்த கிணற்றுக்குள் இறங்கி பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியிருக்கிறது. தற்போது, சிறைச்சாலையிலிருந்து எவ்வாறு கோவிந்தசாமி தப்பிச் சென்றார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவிந்தசாமி ஒரு மாற்றுத்திறனாளி என்பதும், அவர் கைத்தடி வைத்தே நடப்பவர் என்பதும் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.


கன்னூர் சிறையில் பரபரப்பு! ஆயுள் தண்டனை கைதி கோவிந்தசாமி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை

சாலையில் ஒரு பிச்சைக்காரரைப் போல நடந்து சென்ற கோவிந்தசாமியை அவ்வழியாகச் சென்ற ஒரு இளைஞர் கவனித்திருக்கிறார். அப்போதுதான், சிறையிலிருந்து கோவிந்தசாமி என்ற கைதி தப்பிச் சென்ற செய்தி நினைவுக்கு வந்தது. உடனே நான் கோவிந்தசாமி என்று சப்தமாக அழைத்தேன். அதனைக் கேட்டதும் அவர் வேகமாக நடந்து ஒரு சுவரை ஏறிக் குதித்து வேறு பக்கத்தில் ஓடினார். இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தேன். உடனடியாக விரைந்து வந்த அவர்கள் அங்கு சோதனை செய்தபோதுதான், கிணறு ஒன்றில் பதுங்கியிருந்த கோவிந்தசாமியை கைது செய்தனர் என்கிறார். இதையடுத்து, கடுமையான பாதுகாப்புகளைக் கொண்ட திரிச்சூர் சிறைச்சாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி வல்லதோல் நகர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் பயணம் செய்த ஒரு பெண்ணை, கோவிந்தசாமி, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். அவர் கத்திக் கூச்சலிடவே, அப்பெண்ணை கடுமையாகத் தாக்கி, ரயிலிலிருந்து வெளியே வீசியிருக்கிறார்.

அதில், அப்பெண் படுகாயமடைந்தார். அதே ரயிலிருந்து கோவிந்தசாமியும் வெளியே குதித்திருக்கிறார். ரயிலிலிருந்து வீசப்பட்டு ரத்த வெள்ளத்திலிருந்த பெண்ணை கோவிந்தசாமி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினார். பெண்ணின் அழுகுரல் கேட்டதாக, அந்த ரயிலில் வந்த பயணிகள் அடுத்த ரயில் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், ரயில்வே போலீசார் விரைந்து சென்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு சிகிச்சைகள் அளித்தும், ஆறுநாள்கள் போராட்டத்துக்குப் பின், அவர் சிகிச்சைப் பலனின்றி பலியானார். இந்த வழக்கில், குற்றவாளி, கோவிந்தசாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கன்னூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை, சிறையிலிருந்து தப்பியோடி பிடிபட்டிருக்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
Embed widget