மேலும் அறிய

Haridwar Stampede: கோயில்களில் பறிபோகும் உயிர்கள் - கடவுளுக்கு இரக்கமில்லையா? அரசுக்கு பொறுப்பில்லையா?

Haridwar Stampede Reasons: ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Haridwar Stampede Reasons: வழிபாட்டு தலங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது என்பது  இந்தியாவில் தொடர்கதையாகி வருகிறது.

ஹரித்வார் கூட்ட நெரிசலில் 8 பேர் பலி:

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள புகழ்பெற்ற மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்சார வயர் அறுந்து விழுந்ததாக வெளியான வதந்தியால், பிரதான கோடிலுக்கான படிக்கட்டுகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் தகவலின்படி, குழப்பம் ஏற்பட்டபோது கோயிலில் அதிகளவில் பக்தர்கள் திரண்டு இருந்ததால் 55 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்மைக்காலமாக இந்தியாவில் வழிபாட்டு தலங்களள் மற்றும் அதுதொடர்புடைய நிகழ்வுகளால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. யாரோ சிலர் தங்களது பொறுப்பை தட்டிக் கழிப்பதன் விளைவே, இந்த மோசமான நிகழ்வுகளுக்கு காரணமாகின்றன.

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் - 15 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள சங்கம் கட்டில் மௌனி அமாவாசை அன்று நடந்த மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். ஜனவரி 15, 2025 அதிகாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, அப்போது அதிகளவில் பக்தர்கள் குவிந்து இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. அதிகாரப்பூர்வமாக 15 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும், இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

2. ஹத்ராஸ் கூட்ட நெரிசல் - 120+ பேர் பலி

ஜூலை 2, 2024 அன்று, உத்தரபிரதேசத்தின் ஹாத்ராஸில் போலே பாபா என்று அழைக்கப்படும் சூரஜ் பால் ஏற்பாடு செய்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 120 க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் பெண்கள் இறந்தனர். திறந்தவெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 80,000 பக்தர்கள் கூடியிருந்தனர். எந்தவித முறையான முன்னேற்பாடுகளும் இல்லாத நிலையில், தள்ளுமுள்ள ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி உடல்நசுங்கி பலர் உயிரிழந்தர்.

3. இந்தூர் கோயில் கூட்ட நெரிசல் - 36 பேர் பலி

மார்ச் 30, 2023 அன்று, இந்தூர் நகரில் ராம நவமி தினத்தின்போது, ஒரு பழமையான படிக்கிணறு  மீது கட்டப்பட்ட ஒரு பலகை இடிந்து விழுந்ததில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டனர். பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அந்த இடத்தில் கூடியிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

4. வைஷ்ணோ தேவி ஆலய நெரிசல் - 12 பேர் பலி

ஜனவரி 1, 2022 அன்று, ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். புத்தாண்டு நாளில் அதிகப்படியான பக்தர்கள் அங்கு கூடியதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

5. புஷ்கரம் விழா - 27 பேர் பலி

ஜூலை 14, 2015 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமந்திரியில் உள்ள ஒரு நீராடும் தளத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 27 பேர் உயிரிழந்தனர். புஷ்கரம் திருவிழாவின் தொடக்க நாளில் ஆயிரக்கணக்கானோர் கோதாவரி நதியில் புனித நீராட வந்ததால் கூட்டம் அலைமோதியது.

6. திருப்பதி கூட்ட நெரிசல் - 6 பேர் பலி

திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி, வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டிக்கெட் வழங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.

இரக்கம் என்பது இருந்திருந்தால் இத்தகைய மோசமான நிகழ்வுகளை இறைவன் நிச்சயம் தடுத்து இருப்பான் என பாதிக்கப்பட்டவர்கள் குமுறி வருகின்றனர். ஆனால், அரசாங்கம் நிச்சயம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து இருந்தால், மன நிம்மதிக்காக வந்தவர்கள் தங்களது வாழ்க்கையயே இழந்து இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget