மேலும் அறிய

Haridwar Stampede: கோயில்களில் பறிபோகும் உயிர்கள் - கடவுளுக்கு இரக்கமில்லையா? அரசுக்கு பொறுப்பில்லையா?

Haridwar Stampede Reasons: ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Haridwar Stampede Reasons: வழிபாட்டு தலங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது என்பது  இந்தியாவில் தொடர்கதையாகி வருகிறது.

ஹரித்வார் கூட்ட நெரிசலில் 8 பேர் பலி:

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள புகழ்பெற்ற மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்சார வயர் அறுந்து விழுந்ததாக வெளியான வதந்தியால், பிரதான கோடிலுக்கான படிக்கட்டுகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் தகவலின்படி, குழப்பம் ஏற்பட்டபோது கோயிலில் அதிகளவில் பக்தர்கள் திரண்டு இருந்ததால் 55 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்மைக்காலமாக இந்தியாவில் வழிபாட்டு தலங்களள் மற்றும் அதுதொடர்புடைய நிகழ்வுகளால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. யாரோ சிலர் தங்களது பொறுப்பை தட்டிக் கழிப்பதன் விளைவே, இந்த மோசமான நிகழ்வுகளுக்கு காரணமாகின்றன.

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் - 15 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள சங்கம் கட்டில் மௌனி அமாவாசை அன்று நடந்த மகாகும்பமேளாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். ஜனவரி 15, 2025 அதிகாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, அப்போது அதிகளவில் பக்தர்கள் குவிந்து இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. அதிகாரப்பூர்வமாக 15 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும், இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

2. ஹத்ராஸ் கூட்ட நெரிசல் - 120+ பேர் பலி

ஜூலை 2, 2024 அன்று, உத்தரபிரதேசத்தின் ஹாத்ராஸில் போலே பாபா என்று அழைக்கப்படும் சூரஜ் பால் ஏற்பாடு செய்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 120 க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் பெண்கள் இறந்தனர். திறந்தவெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 80,000 பக்தர்கள் கூடியிருந்தனர். எந்தவித முறையான முன்னேற்பாடுகளும் இல்லாத நிலையில், தள்ளுமுள்ள ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி உடல்நசுங்கி பலர் உயிரிழந்தர்.

3. இந்தூர் கோயில் கூட்ட நெரிசல் - 36 பேர் பலி

மார்ச் 30, 2023 அன்று, இந்தூர் நகரில் ராம நவமி தினத்தின்போது, ஒரு பழமையான படிக்கிணறு  மீது கட்டப்பட்ட ஒரு பலகை இடிந்து விழுந்ததில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டனர். பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அந்த இடத்தில் கூடியிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

4. வைஷ்ணோ தேவி ஆலய நெரிசல் - 12 பேர் பலி

ஜனவரி 1, 2022 அன்று, ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். புத்தாண்டு நாளில் அதிகப்படியான பக்தர்கள் அங்கு கூடியதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

5. புஷ்கரம் விழா - 27 பேர் பலி

ஜூலை 14, 2015 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமந்திரியில் உள்ள ஒரு நீராடும் தளத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 27 பேர் உயிரிழந்தனர். புஷ்கரம் திருவிழாவின் தொடக்க நாளில் ஆயிரக்கணக்கானோர் கோதாவரி நதியில் புனித நீராட வந்ததால் கூட்டம் அலைமோதியது.

6. திருப்பதி கூட்ட நெரிசல் - 6 பேர் பலி

திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி, வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டிக்கெட் வழங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.

இரக்கம் என்பது இருந்திருந்தால் இத்தகைய மோசமான நிகழ்வுகளை இறைவன் நிச்சயம் தடுத்து இருப்பான் என பாதிக்கப்பட்டவர்கள் குமுறி வருகின்றனர். ஆனால், அரசாங்கம் நிச்சயம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து இருந்தால், மன நிம்மதிக்காக வந்தவர்கள் தங்களது வாழ்க்கையயே இழந்து இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Embed widget