மேலும் அறிய

கும்பகோணத்தில் வாக்காளர் அட்டையை ஒப்படைக்க வந்த கரும்பு விவசாயிகள் - நடந்தது என்ன?

கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தஞ்சாவூர்: திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரத்திற்கு இன்னும் முற்றுப்புள்ளி விழாத நிலையில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கரும்பு விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தங்கள் விளைவி்க்கும் கரும்பை  அரவைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை  விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான நிலுவை தொகை முழுவதையும் வழங்க வேண்டும்.

விவசாயிகள் பெயரில் வாங்கி கடன்

விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்து சிபில் ஸ்கோர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும்.  சர்க்கரை ஆலை நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2022-ம் ஆண்டு முதல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும்  பல்வேறு இடங்களில் கோரிக்கை மனுக்களையும் அளித்து வருகின்றனர்.


கும்பகோணத்தில் வாக்காளர் அட்டையை ஒப்படைக்க வந்த கரும்பு விவசாயிகள் - நடந்தது என்ன?
வாக்காளர் அடையாளர் அட்டை ஒப்படைப்பு

போராட்டத்தினை தொடர்ந்து 485-வது நாளாக  சங்க ஆலை மட்டக்குழுச் செயலாளர் நாக.முருகேசன் தலைமையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். முன்னதாக நீதிபதிகள் குடியிருப்பு வாசலில் இருந்து வாக்காளர் அடையாள அட்டையை கையில் ஏந்திய படி கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. எனவே அதிகாரிகளிடம்  அளித்து செல்லுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கோரிக்கை மனு

இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் தங்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கவேண்டும். இல்லையென்றால் வாக்காளர் அடையாள அட்டையை  ஒப்படைத்து விட்டு தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்றனர். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் கேட்டுகொண்டதற்கு இணங்க தங்கள் கோரிக்கை மனுக்கை அங்கிருந்த பெட்டியில் போட்டு சென்றனர்.

விவசாயிகள் கருத்து

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கையில், கோட்டாட்சியரிடம் எங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதற்காக  வந்ததோம். போலீசார் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அமைதியாக செல்ல கேட்டுக் கொண்டனர். இதனால் கோரிக்கை மனுவை பெட்டியில் போட்டுவிட்டு வந்துள்ளோம். இதற்கும் நடவடிக்கை இல்லை எனில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.