மேலும் அறிய

பரந்தூர் விமான நிலையத்திற்கு கிடைத்தது முக்கிய அனுமதி.. அடுத்து இதுதான் நடக்கப் போகுது.. போராடும் மக்களின் நிலை ?

Parandur Site Clearance: பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க, தள அனுமதியை வழங்கியது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்

பரந்தூர் பசுமை விமான நிலையம் - parandur greenfield airport

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் (parandur greenfield airport)  அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


பரந்தூர் விமான நிலையத்திற்கு கிடைத்தது முக்கிய அனுமதி.. அடுத்து இதுதான் நடக்கப் போகுது.. போராடும் மக்களின் நிலை ?

அனுமதி வழங்கி அரசாணை

கடந்த அக்டோபர் மாதம், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்தநிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த, 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 3  துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள உட்பட 324 பேர் பணி அமர்த்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடரும் நில எடுப்பு அறிவிப்புகள்

இதனிடையே முதற்கட்டமாக பொடாவூர், மகாதேவி மங்கலம், சிறுவள்ளூர், பரந்தூர்,எடையார்பாக்கம்  கிராமத்தில் விமான நிலையத்துக்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள், ஆட்சேபனை இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலைய அமைவிடத்திற்கு கிடைத்தது அனுமதி

விமான நிலையம் அமைப்பதற்கு முதலில் இடத்திற்கு அனுமதி ஒப்புதல் பெறுவது அவசியம், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரந்தூர் விமான நிலையத்திற்கான தள அனுமதி வேண்டி தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகத்தால் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பரந்துர் விமான நிலையம் அமைவதற்கான, விமான நிலைய அமைவிடத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. 

பரந்தூர் விமான நிலையத்திற்கு கிடைத்தது முக்கிய அனுமதி.. அடுத்து இதுதான் நடக்கப் போகுது.. போராடும் மக்களின் நிலை ?

புதிய விமானம் அமைப்பதற்கான தள அனுமதி வழங்கியது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம். 9 துறைகள் ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையின் படி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க, தள அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவில் விமான போக்குவரத்து, ராணுவம் மற்றும் விமானப்படை துறை, வானிலை துறை ஆகியவை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு தாக்கல் செய்துள்ளன.

அடுத்து என்ன நடக்கப் போகிறது ?

பரந்தூர் விமான நிலையம் சுமார் 32,707 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமைய உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. பரந்தூர் விமான நிலையம் பணிகள் 4 கட்டமாக கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பரந்தூர் விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் பொழுது ஆண்டிற்கு நூறு மில்லியன் பயணிகளை கையாள முடியும். முதல் கட்ட பணிகள் ஜனவரி 2026ல் துவங்கி டிசம்பர் 2028 இல் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பறந்தூர் விமான நிலையத்தில் 2046 வரை பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Savukku Shankar: சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்Eknath Shinde | ”ஏக்நாத் ஷிண்டே துரோகியா?”காமெடியனை மிரட்டும் சிவசேனா சூறையாடப்பட்ட STUDIO...!Vignesh Puthur Profile | CSK-வை கதறவிட்ட விக்னேஷ் புதூர் யார்? AUTO DRIVER மகன் To IPL நாயகன்! | MI | Chennai Super Kings | IPL 2025 | Dhoni

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Savukku Shankar: சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Pawan Kalyan's Politics: இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
Gold Rate Decreased: தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
Embed widget