மேலும் அறிய

தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பணிச்சுமை: மத்திய அரசு கைகழுவுதா? ஆய்வுகள் இல்லையா? அதிர்ச்சி தரும் பதில்!

ஆய்வுகள் நடத்துவதே தனது வேலை அல்ல என்று ஒன்றிய தொழிலாளர் நல அமைச்சகம் கை கழுவுவது கண்டனத்திற்குரியது.  - மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.

தகவல் தொழில் நுட்ப ஊழியர் பணிச்சுமை, மன அழுத்தம் ஒன்றிய அரசிடம் ஆய்வுகள் இல்லை. - மதுரை எம்.பி காட்டம்.
 
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்ட செய்தி குறிப்பு
 
மதுரை எம்.பி கேள்விக்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதில்...,” தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளில் பணி புரியும் ஊழியர்களின் பணிச் சுமை, மன அழுத்தம், உடல் நலம், தொழில்சார் சுகாதாரப் பிரச்னைகள் குறித்து அரசாங்கம் தரவுகளைக் கொண்டுள்ளதா? விரிவான ஆய்வு ஏதும் மேற்கொண்டதா? இல்லையெனில் சுகாதார நிபுணர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து பரிந்துரைகளை பெறுமா? என்ற கேள்வியை (எண் 38/1.12.2025) நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தேன். 
 
அமைச்சர் பதில்
 
அதற்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணை அமைச்சர் சுஷ்ரி ஷோபா கரந்தலாஜே, தொழிலாளர் நலன் குறித்த அதிகாரம் ஒத்திசைவு பட்டியலில் வருவதால் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டின் வரம்பிற்குள்ளும் வந்து விடுகிறது; மத்திய தொழில் உறவுகள் ஒன்றிய தொழில் துறை உறவுகளுக்கான அதிகாரிகள் வாயிலாகவும், மாநில அளவில் மாநில தொழிலாளர் துறையாலும் உறுதி செய்யப்படுகின்றன; பெரும்பாலும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள் "கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்" கீழே வருவதால் அதற்கு பொருத்தமான அரசு, மாநில அரசு ஆகும்; ஒன்றிய அரசு தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் 2020 ஐ இயற்றியுள்ளது; இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் உள்பட அனைத்து துறைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல் நலம், பாதுகாப்பு, நல்வாழ்வை உறுதி செய்கிற நோக்கம் கொண்டது என்று பதிலளித்துள்ளார். 
 
கை கழுவலாமா ஒன்றிய அரசு?
 
அமைச்சரின் பதில் பற்றி சு வெங்கடேசன் எம்பி கருத்து தெரிவிக்கையில், "ஒன்றிய தொழிலாளர் நல அமைச்சரின் பதில் வினோதமாக இருக்கிறது. தொழிலாளர் நல சட்டங்களை திருத்தும் போது இவர்களுக்கு கூட்டாட்சி பற்றியோ, மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு செவி மடுக்க வேண்டும் என்றோ அக்கறை இல்லை. ஏதாவது இவர்களால் பதில் சொல்ல முடியாத கேள்வியை எழுப்பினால் மட்டும் ஒத்திசைவு பட்டியல், மாநில அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்று பதில் சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடும் பணிச் சுமைக்கும், உளவியல் நெருக்கடிகளுக்கும் ஆளாகிறார்கள் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 2018 - 22 க்கு இடைப்பட்ட காலத்தில் 27% தற்கொலைகள் சமூகத்தில் அதிகரித்துள்ளன; சாமானியர்கள் மத்தியில் மட்டுமின்றி உயர்கல்வி பயின்ற தொழில்நுட்ப பணியாளர்கள் மத்தியிலும் தற்கொலைகள் நிகழ்கின்றன; இத்தகைய சூழலில் தகவல் தொழில் நுட்ப துறை மற்றும் அது சார்ந்த சேவைகளில் தொழிலாளர் பணி நிலைமைகள் பற்றிய ஆய்வுகளும் தரவுகளும் தேவை என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆய்வுகள் நடத்துவதே தனது வேலை அல்ல என்று ஒன்றிய தொழிலாளர் நல அமைச்சகம் கை கழுவுவது கண்டனத்திற்குரியது. 
 
ஆனால் இந்த பதிலிலேயே, ஒன்றிய அரசின் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் 2020 இந்த தொழிலாளர்களுக்கும் பொருந்தும், அவர்களின் நலனை உறுதி செய்யும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த தொகுப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கே இந்த தொழில்களின் பிரத்யேக பணி நிலைமைகளை ஆய்வு செய்திருக்க வேண்டாமா? அல்லது எந்த தரவுகள் அடிப்படையில் அது இறுதி செய்யப்பட்டது? தரவுகளே இல்லை என்றால், நிலைமைகள் பற்றிய தகவல்களும் இல்லையென்றால் நீங்கள் உருவாக்கியுள்ள தொகுப்புச் சட்டம் எப்படி அந்த தொழிலில் உள்ள பிரத்தியேக பிரச்சினைகளை கணக்கில் கொண்டிருக்கும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?”
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிவகங்கை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்தி... இதை நம்பி ஏமாற வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
சிவகங்கை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்தி... இதை நம்பி ஏமாற வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
இது பழைய ஆட்சியில்லை.. குறிப்பிட்ட நாட்களில் மாற்றம் நடக்கும் இது விஜய் ஆட்சி - சி.டி.ஆர் நிர்மல் குமார் பெருமிதம் !
இது பழைய ஆட்சியில்லை.. குறிப்பிட்ட நாட்களில் மாற்றம் நடக்கும் இது விஜய் ஆட்சி - சி.டி.ஆர் நிர்மல் குமார் பெருமிதம் !
மதுரை மக்களே வெளியானது கடைசி லிஸ்ட்... நாளை (16.05.26) மின்தடை ஏற்படும் பகுதிகள் இது தான் !
மதுரை மக்களே வெளியானது கடைசி லிஸ்ட்... நாளை (16.05.26) மின்தடை ஏற்படும் பகுதிகள் இது தான் !
சிவகாசி பட்டாசு ஆலைகள் வெடி விபத்து சம்பந்தமாக குழு அமைக்கப்படும் - அமைச்சர் கீர்த்தனா பேட்டி !
சிவகாசி பட்டாசு ஆலைகள் வெடி விபத்து சம்பந்தமாக குழு அமைக்கப்படும் - அமைச்சர் கீர்த்தனா பேட்டி !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!
விஜய் வசம் 16 துறைகள்! யாருக்கு என்னென்ன இலாகா? அதிகாரப்பூர்வ பட்டியல்
EPS-க்கு உதவும் ஸ்டாலின்?CM விஜய்க்கு ஸ்கெட்ச்! SP வேலுமணி அணிக்கு சிக்கல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth: ”CM விஜயை இரண்டு வருடங்கள் தொந்தரவு செய்யாமல் வேலை செய்ய விடுங்கள்” - ரஜினி கோரிக்கை
Rajinikanth: ”CM விஜயை இரண்டு வருடங்கள் தொந்தரவு செய்யாமல் வேலை செய்ய விடுங்கள்” - ரஜினி கோரிக்கை
Rajinikanth: ஸ்டாலின் தோற்றது வருத்தம்.. விஜய் ஜெயித்ததில் பொறாமையா? - ரஜினிகாந்த் கொடுத்த பதில்!
Rajinikanth: ஸ்டாலின் தோற்றது வருத்தம்.. விஜய் ஜெயித்ததில் பொறாமையா? - ரஜினிகாந்த் கொடுத்த பதில்!
Top 10 News Headlines: தவெக தொண்டர்களுக்கு ரஜினி அறிவுரை, அமைச்சர் மகன் கைது, RCB சாதிக்குமா? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: தவெக தொண்டர்களுக்கு ரஜினி அறிவுரை, அமைச்சர் மகன் கைது, RCB சாதிக்குமா? - 11 மணி வரை இன்று
Karuppu: திமுக ஆட்சியில இருந்து இருந்தா சூர்யா சீன வெச்சி இருப்பாரா? ஸ்டாலின் கேமியோ? கருப்பு படத்தால் உபிக்கள் ஆவேசம்
திமுக ஆட்சியில இருந்து இருந்தா சூர்யா சீன வெச்சி இருப்பாரா? ஸ்டாலின் கேமியோ? கருப்பு படத்தால் உபிக்கள் ஆவேசம்
TTV Dhinakaran : அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ வரும்.! விஜயை அலறவிடும் டிடிவி தினகரன்
அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ வரும்.! விஜயை அலறவிடும் டிடிவி தினகரன்
TVK Vijay: உள்ளாட்சியை பிடிக்கணும்..! ஆரம்பத்திலேயே வேகமெடுக்கும் ஆளுங்கட்சி - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
உள்ளாட்சியை பிடிக்கணும்..! ஆரம்பத்திலேயே வேகமெடுக்கும் ஆளுங்கட்சி - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
Anitha R Radhakrishnan: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என விமர்சித்த முன்னாள் அமைச்சர்!
Anitha R Radhakrishnan: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என விமர்சித்த முன்னாள் அமைச்சர்!
Embed widget