மேலும் அறிய
Top 10 News Headlines: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Mar. 6th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கேரள ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூலை 17 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள் என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான StalinStatement-ஐ அறிவிக்க இருக்கிறேன் என கூறியுள்ளார்.
- திமுகவில் இணைந்த பின், வரும் சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்-க்காக போடி தொகுதியிலும், தனக்காக ஆண்டிப்பட்டி மற்றும் போடி தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு அளித்தார் முன்னாள் எம்.பி ஓ.பி. ரவீந்திரநாத்.
- மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகை த்ரிஷாவுடன், தவெக தலைவர் விஜய் ஜோடியாக பங்கேற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
- சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்தது. ஒரு சவரன் ரூ.1,19,680க்கும், ஒரு கிராம் ரூ.160 குறைந்து ரூ.14,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
- உக்ரைன், மேற்கு ஆசியாவில் மோதல் நடந்துவரும் நிலையில், எந்த பிரச்னைக்கும் போர் மூலம் தீர்வு காண முடியாது என, பின்லாந்து அதிபரை சந்தித்து ஆலோசனை நடத்தியபின் பிரதமர் மோடி பேச்சு.
- அசாமில் மாயமான போர் விமானம் கீழே விழுந்து பொறுங்கியதில் 2 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவிப்பு.
- இந்தியப் பெருங்கடலில் இலங்கை அருகே ஈரானிய போர்க்கப்பல் தாக்கப்பட்ட செய்தி அறிந்த உடன், இந்திய கடற்படைமீட்புப் பணிகளில் இறங்கியதாக கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
- மத்திய கிழக்கு பேரால், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க 30 நாட்கள் மட்டும் அனுமதி அளிப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
- ஈரானிய எல்லைக்குள் அமெரிக்கா ஆயிரக்கணக்கான தரைப்படை வீரர்களுடன் நுழைய உள்ளதாக கிடைத்த தகவலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க வீரர்களை கொல்ல கமேனியின் மகன்கள் காத்திருக்கிறோம் என ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி பேசியுள்ளார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















