Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
ஈரான் மீதான போர் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 3 நாடுகளும் ஈரானுக்கெதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க முன்வந்திருக்கின்றன.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து தொடர்ந்து 3 நாள்களாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி, மகளிர் பள்ளியில் 150 பேர் என ஏரளமான ஈரானியர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஈரானிய அமைப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது.
இதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் UAE, சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளையில், ஈரானின் தாக்குதலுக்குள்ளான வளைகுடா நாடுகள் ஈரானைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றன. மேலும், ஈரான் தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்த நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 3 நாடுகளும், ஈரானுக்கெதிரான போரில் அமெரிக்காவுடன் கைகோர்க்கத் தாயாராக கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றன.
அந்த அறிக்கையில், ``ஈரானுக்கு எதிராகத் தேவையான தற்காப்பு நடவடிக்கையை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எங்களுடைய நலன்களையும், அப்பகுதியிலுள்ள எங்களின் நட்பு நாடுகளின் நலன்களையும் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஈரானின் ஏவுகணைகள் மாற்றும் ட்ரோன்கள் ஏவப் பயன்படும் தளங்களை அழிக்கத் தேவையான தற்காப்புத் தாக்குதலை நடத்துவதன் மூலம் இது சாத்தியப்படும்.
இதில் அமெரிக்கா மற்றும் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்" என்று 3 நாடுகளும் தெரிவித்திருக்கின்றன.























