மேலும் அறிய

‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர் - மானாமதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி !

மானாமதுரை வெட்டு சம்பவம்: “போதையில் இருந்தவர்கள் திடீரென தாக்கினர்” –எவ்வளவோ கெஞ்சியும் எங்களை விடவில்லை சரமாரியாக தாக்கினார்கள் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி.

தொடர்ந்து இரண்டு தாக்குதல் சம்பவங்கள் – மானாமதுரையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு: காவல்துறை தீவிர விசாரணை.

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு வெட்டு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனி சீயோன் நகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு வெட்டு ஏற்பட்டது. பலத்த காயங்களுடன் அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மானாமதுரை அருகே ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ஆதனூரைச் சேர்ந்த அழகர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சிகளில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஒருவரை அரிவாளால் விரட்டும் காட்சியும், மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் இன்னொருவரை துரத்தும் காட்சியும் பதிவாகியுள்ளன. இதற்கிடையில் கடந்த மார்ச் 3ஆம் தேதி மானாமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடைக்காட்டூர் மேலத்தெருவில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் தாக்குதல் நடத்திய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது

அந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் நேற்று வெளியானதால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் குறுகிய கால இடைவெளியில் தொடர்ந்து இரண்டு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதால் மானாமதுரை பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவங்கள் தொடர்பாக மானாமதுரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க அந்த பகுதியில் காவல்துறை கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நான் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் விடவில்லை

மேலும் இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயக்குமார் கூறுகையில், “எங்கள் தெருவுக்குள் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தோம். அப்போது தெரு பெயர் பலகை அருகே திரும்பும்போது அங்கு அமர்ந்திருந்த சிலர் போதையில் இருந்தனர். அவர்கள் திடீரென எங்கள் இருசக்கர வாகனத்தை மறித்து அடித்து உடைத்தனர். பின்னர் ‘தெரியாமல் செய்துவிட்டோம்’ என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்கள். அதன்பிறகு நான் மற்றும் என்னுடன் இருந்த நண்பர் மானாமதுரை டவுன் பகுதிக்கு சென்று மீண்டும் அதே வழியாக திரும்பி வந்தோம். அப்போது அங்கு இருந்த போதையில் இருந்த மர்மநபர்கள் ‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர். நான் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் விடவில்லை” என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Crime: வித்தியாசமாக காதலை சொல்வதாக கூறிய காதலி.. நம்பி சென்ற இளைஞர் எரித்துக் கொலை!
Crime: வித்தியாசமாக காதலை சொல்வதாக கூறிய காதலி.. நம்பி சென்ற இளைஞர் எரித்துக் கொலை!
உடலுறவு வைத்து கொள்ள வற்புறுத்திய முன்னாள் காதலன் !! இறுதியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
உடலுறவு வைத்து கொள்ள வற்புறுத்திய முன்னாள் காதலன் !! இறுதியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
அமைச்சர் மூர்த்தி வாக்காளர்களை சிறை படுத்துகிறார் - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு !
அமைச்சர் மூர்த்தி வாக்காளர்களை சிறை படுத்துகிறார் - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு !
குடும்ப தகராறில் அண்ணன் - அண்ணியை வெட்டிப் படுகொலை செய்த நபரால் மதுரையில் பரபரப்பு !
குடும்ப தகராறில் அண்ணன் - அண்ணியை வெட்டிப் படுகொலை செய்த நபரால் மதுரையில் பரபரப்பு !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு தேர்தல் - 5.67 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 70000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு
தமிழ்நாடு தேர்தல் - 5.67 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 70000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு
USA Iran War: ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை நீட்டித்து ட்ரம்ப் அறிவிப்பு - நிராகரித்த தெஹ்ரான், காரணம் என்ன?
USA Iran War: ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை நீட்டித்து ட்ரம்ப் அறிவிப்பு - நிராகரித்த தெஹ்ரான், காரணம் என்ன?
Tamilnadu Round Up: நாளை வாக்குப்பதிவு, பலத்த ஏற்பாடுகள், கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: நாளை வாக்குப்பதிவு, பலத்த ஏற்பாடுகள், கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamil Nadu Election 2026: ஓட்டுப்போட போறீங்களா? வாக்குச்சாவடியில் கோடு போட்ருப்பாங்க - தெரிஞ்சுட்டுப்போங்க
Tamil Nadu Election 2026: ஓட்டுப்போட போறீங்களா? வாக்குச்சாவடியில் கோடு போட்ருப்பாங்க - தெரிஞ்சுட்டுப்போங்க
கேரளாவில் சோகம்: திருச்சூர் பூரம் விழாவுக்காக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து - 13 பேர் உயிரிழப்பு
கேரளாவில் சோகம்: திருச்சூர் பூரம் விழாவுக்காக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து - 13 பேர் உயிரிழப்பு
GOLD AND SILVER RATE TODAY : அடி தூள்.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா.?
அடி தூள்.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா.?
TN Election 2026: சில்லறை பிரச்னைலாம் ஓவர், மெயின் மேட்டருக்கு வருவோமா? வோட்டர்ஸ், ஓட்டு ஏன் போட்டே ஆகணும்..
TN Election 2026: சில்லறை பிரச்னைலாம் ஓவர், மெயின் மேட்டருக்கு வருவோமா? வோட்டர்ஸ், ஓட்டு ஏன் போட்டே ஆகணும்..
Smoking Ban: நல்லா போடுங்க எசமான்.! 2008-க்கு பிறகு பிறந்தவங்க புகை பிடிக்க தடை; எங்க வருது இந்த சட்டம்.?
நல்லா போடுங்க எசமான்.! 2008-க்கு பிறகு பிறந்தவங்க புகை பிடிக்க தடை; எங்க வருது இந்த சட்டம்.?
Embed widget