Ration Shop Employees Salary : ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
Ration Shop Employees Salary : தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களில் விற்பனையாளர்களுக்கு 9,990 முதல் 39,900 வரை ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது., மேலும் கட்டுனர்களுக்கு 9,000 முதல் 35,000 புதிய காலமுறை ஊதியம் வழங்கபட இருப்பதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதிய திட்டம், திருமண உதவித்திட்டம், கடன் உதவித்திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து வழங்க கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக பரிந்துரைகளை வழங்கிட கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தலைமையில் ஒன்பது உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இதனையடுத்து நியாய விலைக் கடை பணியாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக கலந்தாய்வு செய்தும், பரிசீலனை செய்தும் குழு தனது பரிந்துரைகளை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு சமர்ப்பித்துள்ளது.ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்த ஒரு வருடமாகியுள்ள பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே விற்பனையாளருக்கு 6250 ரூபாயும், கட்டுநருக்கு 5500 ரூபாய் வழங்கப்பட்டது. இதனை விற்பனையாளருக்கு 7500 ரூபாய் எனவும், கட்டுநருக்கு 6600 ரூபாய் உயர்த்தி வழங்கப்படலாம் என பரிந்துரை வழங்கப்பட்டது.
இது போன்ற பல்வேறு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு தொடர்பாக பரிந்துரை வழங்கப்பட்டது. இதனையடுத்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் இந்த பரிந்துரையின் மூலம் 26,020 பணியாளர்கள் (22,804 விற்பனையாளர்கள் மற்றும் 3,216 கட்டுநர்கள்) பயன் பெறுவார்கள் எனவும், இக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதால் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அவர்கள் பெற்று வரும் மொத்த சம்பளத்தில் சராசரியாக 15% கூடுதல் நிதிப்பயன் கிடைக்கும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலமுறை ஊதியம் பெற்று வரும் விற்பனையாளர்கள் குறைந்தபட்சமாக ரூ.3039/-ம், அதிகபட்சமாக ரூ.7330/- மும் சம்பள விகிதங்களில் கூடுதலாக பெறுவர் எனவும்,
காலமுறை ஊதியம் பெற்றுவரும் கட்டுநர்கள் குறைந்தபட்சமாக ரூ.2706/-ம், அதிகபட்சமாக ரூ.7430/-ம் சம்பள விகிதங்களில் கூடுதலாக பெறுவர் எனவும், தற்போது தொகுப்பூதியம் பெற்று வரும் விற்பனையாளர் ஒருவர் கூடுதலாக மாதமொன்றுக்கு ரூ.1250/-ம், கட்டுநர் ஒருவர் ரூ.1100/-ம் பெறுவர், என குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இக்குழுவின் ஊதிய உயர்வு பரிந்துரைகளின்படி, தற்போது பணியிலுள்ள பணியாளர்களின் அடிப்படையில்,
கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய உத்தேச கூடுதல் நிதிச்செலவினம், மாதமொன்றிற்கு ரூ.9.51 கோடியும் ஆண்டொன்றிற்கு ரூ.114.12 கோடியும் என்றும் குறிப்பிட்டு தற்போதைய ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்து உள்ள நிலையில் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடை பணியாளர்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் விற்பனையாளர்களுக்கு 9,990 முதல் 39,900 வரை ஊதிய நிர்ணயம், கட்டுனர்களுக்கு 9,000 முதல் 35,000 புதிய காலமுறை ஊதியம் வழங்கபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















