மேலும் அறிய

ராமர் கோயில் திறக்கப்பட்ட அதே நாளில் மம்தா கையில் எடுத்த ஆயுதம்.. சபாஷ் சரியான போட்டி..!

ராமர் கோயில் திறக்கப்பட்ட அதே நாளில் அனைத்து மத நம்பிக்கை பேரணியை தொடங்கியுள்ளார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

உத்தர பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார்.  அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அயோத்தியில் கோலாகலமாக திறக்கப்பட்ட ராமர் கோயில்:

ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், மத ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதை அனுமதிக்க மாட்டேன் என கூறி, ராமர் கோயில் திறப்பு விழாவை அவர் புறக்கணித்தார்.

இந்த நிலையில், ராமர் கோயில் திறக்கப்பட்ட அதே நாளில் அனைத்து மத நம்பிக்கை பேரணியை தொடங்கியுள்ளார் மம்தா. கொல்கத்தாவில் பேரணியை தொடங்குவதற்கு முன்பு காளிகாட் கோவிலில் அவர் வழிபாடு மேற்கொண்டார். கோயிலில் பூஜையை முடித்து கொண்டு, ஹஸ்ரா மோரில் பேரணியை தொடங்கிய மம்தா வழியில் இருந்த மசூதி, தேவாலயம் மற்றும் குருத்வாராக்களுக்கு சென்றார்.

மம்தா கையில் எடுத்த ஆயுதம்:

ராமர் கோயில் விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடிய மம்தா, "மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் விழாக்களை நான் நம்புகிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் திறப்பு விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது” என்றார்.

மம்தா பேரணியையொட்டி கொல்கத்தா காவல்துறை உதவி ஆணையர் அளவிலான அதிகாரிகள் உட்பட 3,500 காவல்துறை அதிகாரிகள் நகரம் முழுவதும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். கூடுதல் படைகளும் தயார் நிலையில் உள்ளன.

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று அறிக்கை வெளியிட்ட மேற்குவங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், "ஜனவரி 22, 2024 அன்று, தேசத்தின் நம்பிக்கையோடு பிணைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை தேசம் காண உள்ளது.

பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் மேற்கு வங்காளத்திலும் நடைபெறும். நமது தேசத்தின் சாரத்தை அதன் மகத்தான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் வலுவான இணைப்புகள் மூலம் மறுவரையறை செய்யும் இந்த சிறப்பான நாளில், நமது தாய்நாட்டின் பெருமையை பகிர்ந்து கொள்ள மீண்டும் உறுதி கொள்வோம்.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் இந்த நிகழ்வை இனிமையாகவும் ஒளி ஏற்றி வைக்கவும் வங்காளத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நண்பர்களே, அனைவரும் சகிப்புத்தன்மையுடன் இருக்கவும், தவறான தகவல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். சட்டம் உங்கள் பக்கம் உள்ளது. சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்க மக்கள் ஒற்றுமையாக எழும் நேரம் இது" என குறிப்பிட்டிருந்தார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Embed widget