மேலும் அறிய

Telangana: குரங்கு கொடுத்த பிஸினஸ்! கரடி வேஷத்துக்கு ரூ.500 சம்பளம்! தெலங்கானாவில் வேற லெவல் விவசாயம்!

"இந்த உடையை வாங்குவதற்கு 10,000 ரூபாயும், அதனை அணிந்து வயலில் நடந்து செல்வதற்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாயும் கொடுத்து நியமித்துள்ளேன். ஆனால் பயிர்கள் வீணாக போவதை விட இந்த செலவு பெரிதல்ல."

நம்மூரில் பறவைகள், விலங்குகள், பயிரை தின்று நாசமாக்கி விடாமல் இருக்க மனித உருவில், வைக்கோல் வைத்து செய்யப்பட்ட பொம்மைக்கு சட்டை பேண்ட் அணிவித்து வயலில் நிறுத்துவார்கள். ஆனால் அதன் மேலேயே காக்கைகள் அமர்ந்து போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும். அவற்றை நம்மூரில் சோளக்காட்டுபொம்மை என்று கூறுவோம். ஆனால் "மனுஷனுக்கு எந்த குரங்கு சார் பயப்புடுது?" என்கிறார்கள் தெலங்கானா விவசாயிகள். தெலங்கானாவில் குரங்குகள் பயிரை நாசம் செய்வதை தவிர்க்க விலங்குகளை கொண்டு வந்து நிறுத்தும் ஐடியா வெற்றி பெற்று பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

தெலுங்கானாவில் உள்ள சிர்சில்லாவைச் சேர்ந்த ஜெய்பால் ரெட்டி என்ற விவசாயி, தனது நான்கு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு, வருகிறார். ஒவ்வொரு ஆண்டும், அவரது நெல் அறுவடைக்கு தயாராகும் போது, ​​​​குரங்குகள் கூட்டம் அவரது வயலைத் தாக்கி பயிரை நாசம் செய்து வந்துள்ளது. இந்த நேரத்தில் அவர் ஒரு வித்தியாசமான முறையில் இறங்கி பயிர்களை காக்க முடிவு செய்தார்.

Telangana: குரங்கு கொடுத்த பிஸினஸ்! கரடி வேஷத்துக்கு ரூ.500 சம்பளம்! தெலங்கானாவில் வேற லெவல் விவசாயம்!

ஜெய்பால் ரூ. 14,000 செலவழித்து உயிர்வாழும் அளவில் உள்ள ஒரு புலி போன்ற பொம்மையை வாங்கி தனது விவசாய நிலத்தின் நடுவில் வைத்தார். அப்படி வைத்தபிறகு குரங்குகள் உண்மையான புலி என்று நினைத்து அந்த பக்கம் வருவதை நிறுத்திக்கொண்டுள்ளன. தற்போது அவரது வித்யாசமான ஐடியா மூலம், குரங்குகள் அவரது பயிர்களை தாக்குவதை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டது. "அவை எல்லோரும் நினைப்பது போல சாதாரண குரங்குகள் இல்லை, மிகவும் ஆபத்தானவை, மனிதர்களை கண்டு அவற்றுக்கு பயம் இல்லை. அதனால் தான் புலியை வைத்து பயமுறுத்த முயற்சி செய்தேன். அது உண்மையிலேயே ஒரு புலி போன்ற உருவமும் அளவும் கொண்டது. நான் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதாக விவசாய தொழிலாளர்களிடம் சொன்னபோது மின்சார வேலி வைக்க சொன்னார்கள். ஆனால் ஒன்றுமறியாத அப்பாவி குரங்குகளை கொள்வது தவறு என்று நானே இப்படி ஒரு வழியை சிந்தித்தேன்", என்று கூறினார். 

Telangana: குரங்கு கொடுத்த பிஸினஸ்! கரடி வேஷத்துக்கு ரூ.500 சம்பளம்! தெலங்கானாவில் வேற லெவல் விவசாயம்!

அதே போல, சித்தி பேட்டா மாவட்டம் நாக சமுத்திரத்தை சேர்ந்த பென்சில் ஐயா என்பவர், 10 ஏக்கர் விளை நிலத்தில் மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், குரங்குகள் அவ்வபோது பயிர்களை சேதப்படுத்துவதால் இவர் ஜெயபாலின் ஐடியாவை இன்னும் ஒருபடி மேலே கொண்டுபோய், தினமும் கரடி போல் வேடமணிந்துக்கொண்டு தனது விளை நிலத்தை பாதுகாத்து வருகிறார். ஹைதராபாத்திற்கு சென்று ஒரு பெரிய வடிவ கரடி உடையை வாங்கி வந்துள்ளார். "அந்த உடையை வாங்குவதற்கு 10,000 ரூபாய் ஆனது. அதனை அணிந்துகொண்டு வயலில் நடந்து செல்வதற்காக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் கொடுத்து நியமித்துள்ளேன். ஆனால் பயிர்கள் வீணாக போவதை விட இந்த செலவு பெரிதல்ல. இதன்மூலம் என் நிலம் மட்டுமல்ல, பக்கத்து நிலமும் கூட பாதுகாக்கப் படுகிறது" என்று கூறுகிறார். இப்போது கரடி வேஷம் போட சம்பளத்துக்கு ஆள் தேடி வருகிறார்களாம் அந்த ஊர் விவசாயிகள்.

இந்த இருவரை குறித்தும் அவரவர் கிராமங்களில் பொதுமக்கள் பெரிய அளவில் பேசி வருகின்றனர். இவர்களை தொடர்ந்து பலரும் இந்த ஐடியாவை பின்தொடர்வார்கள் என்று தெரிகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
Embed widget