மேலும் அறிய

தவறு செய்திருக்க வேண்டும் என அவசியம் இல்லை...இதற்காகவும் விவாகரத்து வழங்கலாம்... உச்ச நீதிமன்றம் அதிரடி 

திருமண உறவை முடிவுக்கு கொண்டு வர கணவன், மனைவி எவரேனும் ஒருவரின் தவறை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை  என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருமண உறவை முடிவுக்கு கொண்டு வர கணவன், மனைவி எவரேனும் ஒருவரின் தவறை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை  என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

 

சமரசத்தை எட்டவே முடியாத அளவிலான கருத்து வேறுபாட்டின் காரணமாகவே திருமண உறவை நீடிக்க முடியாத சூழல் ஏற்படலாம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விவாகரத்து சட்டம் தவறான கோட்பாட்டின்  அடிப்படையில் உள்ளது. அதே நேரத்தில், இரண்டு நல்ல மனிதர்களால் நல்ல தம்பதியினராக இருக்க முடியாது என்பதே உண்மை என நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

சரி செய்யவே முடியாத அளவுக்கு உறவு பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் ஏற்கெனவே விவாகரத்து வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு தொடர்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஏ.எஸ். ஓகா, விக்ரம் நாத் மற்றும் ஜெ.கே. மகேஸ்வரி ஆகியோர் கொண்ட அமர்வு, "கேள்வி என்னவென்றால், ஒரு நபர் தவறு செய்தால் மட்டும்தான் விவாகரத்து வழங்க வேண்டுமா?

விவாகரத்து கோருபவர் குற்றம் சாட்டும் பெரும்பாலான தவறுகள் சமூக பழக்க வழக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளிலிருந்து எழுகின்றன எனக் கூறிய நீதிமன்றம், "அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எதை தவறாக சொல்கிறார்கள்? அவர் காலையில் எழுந்து என் பெற்றோருக்கு தேநீர் கொடுப்பதில்லை என்று யாராவது சொல்வார்கள். 

இது ஒரு தவறான கோட்பாடு? அவற்றில் நிறைய சமூக நெறிமுறைகளிலிருந்து எழுகின்றன. அவற்றிலிருந்தே நாம் தவறுகளை சுட்டி காட்டுகிறோம்" என தெரிவித்தது.

சட்டத்தின் அடிப்படையில், சரி செய்ய முடியாத அளவுக்கே, திருமண உறவு பாதிக்கப்பட்டிருந்தாலும் விவாகரத்து தரப்படுவதில்லை. இருப்பினும், தனது தனித்துவமான அதிகார வரம்பான அரசியலமைப்பு பிரிவு 142இன் கீழ் உச்ச நீதிமன்றம் விவாகரத்து உத்தரவுகளை பிறப்பித்து நீதியை வழங்கி வருகிறது.

2016 ஆம் ஆண்டில், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்தை பெறுவதற்கு 6 முதல் 18 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய தரப்பை குடும்ப நீதிமன்றத்திற்கு அனுப்பாமல், விவாகரத்து வழங்குவதற்காக சட்டப்பிரிவு 142 இன் கீழ் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுமா என்பதை ஆராய வேண்டும் என சிறிய அமர்வு ஒன்று அரசியல் சாசன அமர்வுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. 

அப்போது, ​​மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், வி. கிரி, துஷியந்த் தவே, மீனாட்சி அரோரா ஆகியோரை நீதிமன்றத்திற்கு உதவிடும் வகையில் நீதிமன்ற நண்பராக நியமித்தது.

சரி செய்ய முடியாத அளவுக்கு திருமண உறவு பாதிக்கப்பட்டிருந்தால், அதன் அடிப்படையில், தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கும் உச்ச நீதிமன்றத்திற்கு ஆதரவாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஜெய்சிங், திருமண உறவின் அத்தியாவசிய அம்சங்கள் மறைந்துவிட்டால், அதற்கு ஒரே வழி விவாகரத்துதான் என வாதம் முன்வைத்தார். 

திருமணம் என்பது ஒரு புனிதம் என்பதையும், திருமணத்தை முறிக்க மாட்டோம் என்பது இந்தியாவின் பொதுக் கொள்கை என்பதையும் குறிக்கும் தீர்ப்புகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிமன்றம், "இவை இரண்டும் வெவ்வேறான விஷயங்கள். புனிதம் என்பதே திருமணம் எப்படி நடைபெறுகிறது என்பதுதான். திருமணம் முறியுமா இல்லையா என்பதில் சந்தேகமில்லை.

பிரச்சினை என்னவென்றால், இந்து திருமணச் சட்டத்தின் கீழ், விவாகரத்து தவறான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், சரி செய்ய முடியாத அளவுக்கு உறவு பாதிக்கப்படுகிறது என்பது ஒரு அடிப்படை உண்மை" என தெரிவித்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! பயணிகளின் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! பயணிகளின் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
4 லட்சத்தை எட்டிய மாணவர் சேர்க்கை; பெருமிதப்பட்ட அமைச்சர் அன்பில்- கேள்வி எழுப்பிய நெட்டிசன்!
4 லட்சத்தை எட்டிய மாணவர் சேர்க்கை; பெருமிதப்பட்ட அமைச்சர் அன்பில்- கேள்வி எழுப்பிய நெட்டிசன்!
MG Hector Plus: இருக்குற நிலைமைக்கு இது அவசியமா? விலையை ஏற்றிய MG மோட்டார் - எந்த காருக்கு தெரியுமா?
MG Hector Plus: இருக்குற நிலைமைக்கு இது அவசியமா? விலையை ஏற்றிய MG மோட்டார் - எந்த காருக்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! பயணிகளின் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! பயணிகளின் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
4 லட்சத்தை எட்டிய மாணவர் சேர்க்கை; பெருமிதப்பட்ட அமைச்சர் அன்பில்- கேள்வி எழுப்பிய நெட்டிசன்!
4 லட்சத்தை எட்டிய மாணவர் சேர்க்கை; பெருமிதப்பட்ட அமைச்சர் அன்பில்- கேள்வி எழுப்பிய நெட்டிசன்!
MG Hector Plus: இருக்குற நிலைமைக்கு இது அவசியமா? விலையை ஏற்றிய MG மோட்டார் - எந்த காருக்கு தெரியுமா?
MG Hector Plus: இருக்குற நிலைமைக்கு இது அவசியமா? விலையை ஏற்றிய MG மோட்டார் - எந்த காருக்கு தெரியுமா?
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
நல்லாசிரியர்; டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆக.3 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
நல்லாசிரியர்; டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆக.3 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
ED Raids Ambani: இதை எதிர்பார்க்கல..! அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை - என்ன காரணமாம்?
ED Raids Ambani: இதை எதிர்பார்க்கல..! அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை - என்ன காரணமாம்?
காதுல செங்கல்ல தேய்க்குற மாதிரி இருக்கு...சாய் அப்யங்கர் இசையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
காதுல செங்கல்ல தேய்க்குற மாதிரி இருக்கு...சாய் அப்யங்கர் இசையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Embed widget