மேலும் அறிய

காவல்துறை ஆயுதக் கிடங்கை சூறையாடிய கும்பல்..பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு..மணிப்பூரில் ஓயாத வன்முறை..!

மக்களை ஒன்று திரட்டி, நாசவேலையில் ஈடுபட வைக்கும் முயற்சிகளும் தீ வைப்பு சம்பவங்களும் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது.

மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள குவாக்டா டவுனிலும் சுராசந்த்பூர் மாவட்டம் காங்வாய் பகுதியிலும் தானியங்கி ஆயுதங்களை பயன்படுத்தி கும்பல் நேற்று இரவு வன்முறையில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை வரை, அங்காங்கே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளது.

மக்களை ஒன்று திரட்டி, நாசவேலையில் ஈடுபட வைக்கும் முயற்சிகளும் தீ வைப்பு சம்பவங்களும் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ், விரைவு அதிரடிப் படை மற்றும் மாநில காவல்துறை ஆகியவற்றின் கூட்டுப் படைகள் இம்பாலின் கிழக்கு மாவட்டத்தில் நள்ளிரவு வரை கொடி அணிவகுப்பு நடத்தினர்.

அட்வான்ஸ் மருத்துவமனைக்கு அருகில் உள்ள அரண்மனை வளாகத்தில் தீ வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை சுமார் 1,000 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூடி, தீ வைப்பு மற்றும் நாசவேலையை மேற்கொள்ள முயன்றது. கும்பலைக் கலைக்க விரைவு அதிரடிப் படை கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசினர். இதில், அப்பாவி மக்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.

மணிப்பூர் பல்கலைக்கழகம் அருகேயும் நாசவேலையில் ஈடுபட கும்பல் முயற்சித்தது. இரவு 10.40 மணியளவில் தோங்ஜு அருகே 200 முதல் 300 பேர் கூடி, உள்ளூர் எம்.எல்.ஏ.வின் வீட்டை சேதப்படுத்த முயன்றனர். ஆனால், விரைவு அதிரடிப் படை அதிகாரிகள் கூட்டத்தை கலைத்தனர்.

நேற்றிரவு மற்றொரு கும்பல் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள இரிங்பாம் காவல் நிலைய ஆயுதக் கிடங்கை சேதப்படுத்த முயன்றது. இரவு 11.40 மணியளவில் 300 முதல் 400 பேர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால், விரைவு அதிரடிப் படை அதிகாரிகள்
கூட்டத்தை கலைத்தனர்.

200 முதல் 300 பேர் கொண்ட கும்பல், சின்ஜெமையில் நள்ளிரவுக்குப் பிறகு பாஜக அலுவலகத்தைச் சுற்றி வளைத்தது. துரிதமாக செயல்பட்ட ராணுவக் குழு அந்த கூட்டத்தைக் கலைத்தது. மற்றொரு கும்பல் நள்ளிரவில் மேற்கு இம்பாலில் உள்ள மாநில பாஜக தலைவர் அதிகாரிமாயும் சாரதா தேவியின் இல்லத்தையும் நாசமாக்க முயன்றதுய ஆனால், அதை ராணுவம் மற்றும் விரைவு அதிரடிப் படை தடுத்து நிறுத்தியது.

மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. வன்முறை சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், வன்முறை சம்பவங்கள் தொடர்வது பல்வேறு விதமான கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.

நேற்று, 1,000 க்கும் மேற்பட்ட கும்பலால் மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்  வீட்டுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்பாலில் ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கும்பல் இம்பாலில் உள்ள அமைச்சரின் வீட்டை தீ வைத்து எரித்துள்ளனர். சம்பவத்தின் போது அமைச்சரின் வீட்டில் ஒன்பது பாதுகாப்புப் படையினர், ஐந்து பாதுகாவலர்கள் மற்றும் எட்டு கூடுதல் காவலர்கள் பணியில் இருந்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Coolie Movie Review : ரஜினி ரசிகர்கள் இத எதிர்பார்க்கல... கூலி திரைப்பட விமர்சனம்
Coolie Movie Review : ரஜினி ரசிகர்கள் இத எதிர்பார்க்கல... கூலி திரைப்பட விமர்சனம்
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு: விடைத்தாள் நகல் வெளியீடு! காண்பது, மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு: விடைத்தாள் நகல் வெளியீடு! காண்பது, மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
’திமுக மாவட்ட செ. கூட்டத்தை புறக்கணித்த தங்கதமிழ்செல்வன்’ காரணம் என்ன..?
’கூட்டத்திற்கு செல்லாத தங்கதமிழ்செல்வன்’ கடும் அப்செட்..!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Coolie Movie Review : ரஜினி ரசிகர்கள் இத எதிர்பார்க்கல... கூலி திரைப்பட விமர்சனம்
Coolie Movie Review : ரஜினி ரசிகர்கள் இத எதிர்பார்க்கல... கூலி திரைப்பட விமர்சனம்
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு: விடைத்தாள் நகல் வெளியீடு! காண்பது, மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு: விடைத்தாள் நகல் வெளியீடு! காண்பது, மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
’திமுக மாவட்ட செ. கூட்டத்தை புறக்கணித்த தங்கதமிழ்செல்வன்’ காரணம் என்ன..?
’கூட்டத்திற்கு செல்லாத தங்கதமிழ்செல்வன்’ கடும் அப்செட்..!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி; சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசத்திய அரசுப்பள்ளி!
விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி; சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசத்திய அரசுப்பள்ளி!
கடலோர காவல்படையில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
கடலோர காவல்படையில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
ரகசியமாக நடந்த அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம்.. யார் இந்த சானியா சந்தோக்?ஆச்சரிய தகவல்!
ரகசியமாக நடந்த அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம்.. யார் இந்த சானியா சந்தோக்?ஆச்சரிய தகவல்!
அதிமுக கொடுத்ததை திமுக கொடுக்க மறுப்பது ஏன்? -  அன்புமணி ஆவேசம்!
அதிமுக கொடுத்ததை திமுக கொடுக்க மறுப்பது ஏன்? - அன்புமணி ஆவேசம்!
Embed widget