மேலும் அறிய

SC Center: ஆளுநர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அரசு - ”உச்சநீதிமன்றம் தலையிட வேண்டாம்”

SC Center: குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிப்பது அதிகார சமநிலையை சீர்குலைக்கும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

SC Center: குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிப்பதை மத்திய அரசு கடுமையாக எதிர்த்துள்ளது.

மத்திய அரசு எதிர்ப்பு:

சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கோ அல்லது நிறுத்துவதற்கோ குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மனுவில் மத்திய அரசு தனது தரப்பு கருத்துகளை முன்வைத்துள்ளது. அதில்,  ”நீதித்துறை மறுஆய்வு அதிகாரங்கள் என்ற போர்வையில், அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட உயர்மட்ட மண்டலத்தை அனுமதிக்க முடியாத வகையில் உச்ச நீதிமன்றம் ஆக்கிரமிப்பது சட்டமன்றம், நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறைக்கு இடையிலான அதிகார சமநிலையை சீர்குலைக்கும். ஜனநாயக சமூகத்தில் எழக்கூடிய ஒவ்வொரு புதிருக்கும் நீதித்துறை திறவுகோல்களையோ அல்லது தீர்வுகளையோ கொண்டிருக்கவில்லை” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

”நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை”

மேலும், “பிரிவு 142 அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை மாற்றும் கருதப்பட்ட ஒப்புதல் என்ற கருத்தை உருவாக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை. ஒப்புதல் வழங்குதல் அல்லது நிறுத்தி வைப்பதில் உள்ள காரணிகளுக்கு சட்ட அல்லது அரசியலமைப்பு இணையானது இல்லாததால், நீதித்துறை மறுஆய்வு என்ற பாரம்பரிய கருத்தை நீக்கி ஒப்புதலுக்குப் பயன்படுத்த முடியாது. நிர்வாகத்தின் மூன்று உறுப்புகளும் அரசியலமைப்பிலிருந்து அதிகாரத்தைப் பெறுகின்றன. இது நீதித்துறை ஆளுநர் பதவியை ஒரு அடிபணிந்தவராக தள்ளுவதற்கு அதிகாரம் இல்லை. குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களின் முடிவுகள் தொடர்பான மசோதாக்கள் தொடர்பான பிரச்சினைகள், அரசியல் பதில்களுக்குத் தகுதியானவை, அவசியம் நீதித்துறை அல்ல" என்று மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குடியரசு தலைவரின் 14 கேள்விகள்:

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணையின் முடிவில் ஏப்ரல் 8 ஆம் தேதி நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன்
ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்கள் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் வழங்க உத்தரவிட்டனர்.

இதுகுறித்து 14 கேள்விகளை எழுப்பிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் மனுவை, தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மட்டுமின்றி அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, சனிக்கிழமை மத்திய அரசு தனது தரப்பு கருத்துகளை பதிவு செய்தது. அதில், மசோதாக்கள் தொடர்பாக குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களின் முடிவுகளின் மீது நீதித்துறை அதிகாரங்களைப் பயன்படுத்துவது நீதித்துறைக்கு மேலாதிக்கத்தை வழங்கும் என்று மத்திய அரசு கூறியது. இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது என தெரிவித்துள்ளது. அதேநேரம், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்,நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளதோடு, குடியரசு தலைவரின் கேள்விகளை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Annamalai Vs Thackeray: சவால் விட்ட அண்ணாமலை; பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே; என்ன இப்படி சொல்லிட்டார்.?
சவால் விட்ட அண்ணாமலை; பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே; என்ன இப்படி சொல்லிட்டார்.?
Pongal Gift Amount: அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Annamalai Vs Thackeray: சவால் விட்ட அண்ணாமலை; பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே; என்ன இப்படி சொல்லிட்டார்.?
சவால் விட்ட அண்ணாமலை; பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே; என்ன இப்படி சொல்லிட்டார்.?
Pongal Gift Amount: அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! பொங்கல் முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் ரூ.3000 வரவு; சூப்பர் அறிவிப்பு
Jana Nayagan Vs Censor Board: ‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
TVK VIJAY: டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
டெல்லியில் சிபிஐ கேட்ட முதல் கேள்வி.! ஆடிப்போன விஜய்- விசாரணையில் நடந்தது என்ன.?
ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
Pongal Specail Trains: பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
பொங்கலுக்கு ஊருக்கு போக பிளான் பண்ணிட்டீங்களா.? என்னென்ன சிறப்பு ரயில்கள் இருக்குன்னு பாருங்க
Embed widget