மேலும் அறிய
விஜய் இப்படியே இருந்தால் ஒன்னும் பண்ணமுடியாது... செல்லூர் ராஜூ கொடுக்கும் அட்வைஸ் என்ன?
எல்லாரும் எம்.ஜி.ஆராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். எப்போதும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் - விஜயை சாடிய செல்லூர் ராஜூ.

செல்லூர் ராஜூ
Source : whats app
த.வெ.க., தலைவர் விஜய் பனையூரில் இருந்து வெளியே வந்து களத்திற்கு வரவேண்டும். வெறும் இமேஜை வைத்து மட்டும் வெற்றி பெற முடியாது - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி.
செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடல் நகர் 2 வது வார்டில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கரிசல்குளம் கண்மாய் மறுகால் வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ED ரெய்டு குறித்த கேள்விக்கு
தி.மு.க., - வில் இது புதுசு இல்லை. பல அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. அதே போல் மாநகராட்சி விவகாரத்தில் அதிமுக புகார் அளித்ததன் காரணமாகவே முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். மாநகராட்சி விவகாரத்தில் குரல் கொடுத்த அதிமுக மீது திமுக நிலைக்குழு தலைவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
திமுக கூட்டணியை எதிர்க்கட்சிகள் உடைக்க நினைக்கிறார்கள் என்ற திருமாவளவனின் கருத்துக்கு
திருமாவளவன் திசை தெரியாமல் காட்டுக்குள் சென்றுவிட்டார். அவருடைய தலைமை பண்பை விமர்சிக்க கூடிய அளவில் ஆகிவிட்டார். என் கையை பிடித்து பேசியவர் "அம்மா" என்று அம்மாவின் பண்பை பேசியவர் திருமாவளவன். திருமாவளவனுக்கு என்ன நெருக்கடி வந்துள்ளது என்று தெரியவில்லை. தலித் மக்களை பொதுத் தொகுதியில் நிறுத்திய அம்மாவை பற்றியெல்லாம் பேசி வருகிறார். அவர் இயக்கத்தை என்ன செய்வதென்றே தெரியவில்லை. தான் பாணியை மாற்றிக்கொள்ள வேண்டும்.
விஜய் மாநாடு மற்றும் விஜய் களத்தில் வந்தால் இடையூறு ஏற்படும் என த.வெ.க வினரின் கருத்துக்கு
விஜய் பனையூரில் இருந்து கொண்டு அரசியல் செய்வது விமர்சனத்திற் குள்ளாகியுள்ளது. விஜய் களத்திற்கு வர வேண்டும். எல்லோரும் களத்திற்கு வந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கயோ நடக்கும் மாநாடு, செயற்குழுவில் பேசி கடைசி நேரத்தில் "இமேஜை" வைத்து வெற்றி பெறலாம் என்று நினைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் வெளியில் வந்தால் இடையூறு ஏற்படும் என திரும்ப திரும்ப சொன்னால் எப்படி? விஜய் வெளியில் வந்து மக்களை சந்திக்க வேண்டும். எல்லாரும் எம்.ஜி.ஆராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். எப்போதும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான். எடப்பாடி பழனிச்சாமி செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் வருகிறது" என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement





















