Breaking News Tamil LIVE: கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE

Background
எடப்பாடி பழனிசாமியுடன் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் ஆலோசனை!
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் சரோஜா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டங்களை, வருடத்திற்கு மூன்று முறை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை களைந்து, கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கருமுட்டை விற்ற இடைத்தரகருக்கு ஒருநாள் போலீஸ் காவல்
ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்ற வழக்கில் இடைத்தரகர் மாலதிக்கு ஒருநாள் போலீஸ் காவல்
அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டும் கனமழை
அரக்கோணம் மற்றும் அதன சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மங்கம்மாபேட்டை,ஜோதி நகர், சுவால் பேட்டை, எஸ்.ஆர்.கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷாவுக்கு திடீர் நெஞ்சுவலி..
இமாச்சலில் இருந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

