மேலும் அறிய

விழுப்புரத்தில் மூதாட்டிக்கு மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பரபரப்பு...!

’’பொது இலவச மருத்துவ முகாம் என நினைத்து கொரோனா தடுப்பூசி முகாமிற்கு சென்ற மூதாட்டிக்கு மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’

விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகராட்சிகளில் உள்ள 75 வார்டுகள், மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள், 688 கிராம ஊராட்சிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நூறுநாள் வேலை நடைபெறும் பணியிடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 1,150 இடங்களில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மூதாட்டிக்கு மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பரபரப்பு...!

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி வளாகத்தில் நேற்று காலை கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடந்தது. அப்போது, திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் (48) தனது தாய் கண்ணம்மாவுடன் (70), வந்து, அங்கிருந்த மருத்துவத்துறை ஊழியர்களிடம், தனது தாய்க்கு விட்டலாபுரத்தில் நேற்று காலை நடந்த சிறப்பு முகாமின் போது, மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். இதனால், அவரது உடல் நலத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா  என, கேட்டார். அப்போது முகாமிற்கு வந்த மாவட்ட ஆட்சியர் மோகனிடமும் முறையிட்டார். சிவக்குமார் கூறுகையில், ஏற்கனவே என்னுடைய தாயாருக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஏரி பராமரிப்பு வேலையின் போது, சுகாதாரத் துறை சார்பில் போடப்பட்டது.

NEET Suicide : நீட் தேர்வு.. தமிழ்நாட்டில் தொடரும் சோகம்.. வாழ்க்கையை முடித்து கொண்ட தனுஷ்


விழுப்புரத்தில் மூதாட்டிக்கு மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பரபரப்பு...!

 

நேற்று காலை நான் நிலத்திற்கு சென்றிருந்த நேரத்தில், என்னுடைய தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால், பொது இலவச மருத்துவ முகாம் என நினைத்து விட்டலாபுரத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி மெகா முகாமிற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், ஏற்கனவே அவர் தடுப்பூசி போட்டுள்ளாரா என்ற விவரத்தைக் கேட்காமல், அவருக்கு மூன்றாவது முறையாக தடுப்பூசி போட்டுள்ளனர். இது குறித்து தடுப்பூசி போட்டவர்களிடம் கேட்ட போது, திண்டிவனத்திற்கு சென்று டாக்டரிடம் கேட்கும்படி கூறியதால் இங்கு வந்து புகார் தெரிவித்தேன்.

 


விழுப்புரத்தில் மூதாட்டிக்கு மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பரபரப்பு...!

இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியரிடம் கூறிய போது, மருத்துவரிடம் கூறும் படி தெரிவித்து சென்று விட்டார். மருத்துவரிடம் கேட்ட போது, அவருடைய மொபைல் எண்ணைக் கொடுத்து, ஏதாவது பிரச்னை என்றால் போன் செய்யும் படி கூறியுள்ளார் என்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Viral Video: தண்டவாளத்தில் சிக்கிய பெண்; தக்க சமயத்தில் ரயிலை நிறுத்திய காவலர் - வைரலாகும் வீடியோ

இதே போல கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்றைய தினம் ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு மீண்டும் செவிலியர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
Sarathkumar speech : அப்போ வேண்டாம்!  இப்போ வேண்டுமா? விஜய் கவர்னரை ஏன் சந்தித்தார் ? சரத்குமார் கேள்வி
Sarathkumar speech : அப்போ வேண்டாம்! இப்போ வேண்டுமா? விஜய் கவர்னரை ஏன் சந்தித்தார் ? சரத்குமார் கேள்வி
DMK Govt: இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? 13 ஆண்டாகியும் பணி நிரந்தரம் இல்லையா? ராமதாஸ் கண்டனம்!
DMK Govt: இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? 13 ஆண்டாகியும் பணி நிரந்தரம் இல்லையா? ராமதாஸ் கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajithkumar award: அஜித்திற்கு Padma Bhushan.. பின்னணியில்  இருக்கும் அரசியல்! விஜய் தான் காரணமா?TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
கேள்வி எழும்போது விசாரணை செய்யுங்கள்! - வேங்கை வயல் விவகாரத்தில் விஜய் ஆவேசம்
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
NEET 2025 New Pattern: மாணவர்களே மறக்காதீங்க; நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு
Sarathkumar speech : அப்போ வேண்டாம்!  இப்போ வேண்டுமா? விஜய் கவர்னரை ஏன் சந்தித்தார் ? சரத்குமார் கேள்வி
Sarathkumar speech : அப்போ வேண்டாம்! இப்போ வேண்டுமா? விஜய் கவர்னரை ஏன் சந்தித்தார் ? சரத்குமார் கேள்வி
DMK Govt: இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? 13 ஆண்டாகியும் பணி நிரந்தரம் இல்லையா? ராமதாஸ் கண்டனம்!
DMK Govt: இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? 13 ஆண்டாகியும் பணி நிரந்தரம் இல்லையா? ராமதாஸ் கண்டனம்!
Republic Day 2025 Parade LIVE:  டெல்லியில் கோலாகலம்..! பிரமாண்ட அணிவகுப்பு, வியக்கவைக்கும் இந்திய ராணுவ பலம்
Republic Day 2025 Parade LIVE: டெல்லியில் கோலாகலம்..! பிரமாண்ட அணிவகுப்பு, வியக்கவைக்கும் இந்திய ராணுவ பலம்
Republic Day Images: ஜெய்ஹிந்த்! இந்த ஃபோட்டோ அனுப்பி வாழ்த்து சொல்லுங்க! களைகட்டும் குடியரசு தினம்!
Republic Day Images: ஜெய்ஹிந்த்! இந்த ஃபோட்டோ அனுப்பி வாழ்த்து சொல்லுங்க! களைகட்டும் குடியரசு தினம்!
Republic Day 2025 Live: தேசியக்கொடியை அவிழ்த்து பறக்கவிட்டு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் - எங்கே தெரியுமா?
Republic Day 2025 Live: தேசியக்கொடியை அவிழ்த்து பறக்கவிட்டு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் - எங்கே தெரியுமா?
Republic Day 2025 LIVE: டெல்லியில் தேசிய கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
Republic Day 2025 LIVE: டெல்லியில் தேசிய கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
Embed widget