Sarathkumar speech : அப்போ வேண்டாம்! இப்போ வேண்டுமா? விஜய் கவர்னரை ஏன் சந்தித்தார் ? சரத்குமார் கேள்வி
நடிகர் விஜய் முதல் மீட்டிங்கில் கவர்னர் இருக்க வேண்டாம் என சொல்லி விட்டு பின்னர் கவர்னரை ஏன் சந்தித்தார் என சரத்குமார் கேள்வி

கமலாயத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சி
நாட்டின் 76 - வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை தி.நகர் உள்ள கமலாலயத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் மற்றும் குஷ்பு சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு பேசுகையில் ,
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள். இன்று கமலாலயத்தில் குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
வேங்கை வயல் குறித்த கேள்விக்கு நடிகை குஷ்பு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.
அதே நேரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நானும் , சரத்குமார் அவர்களும் கட்சி அலுவலகம் வரவில்லை. தேர்தலில் பரப்புரையில் தனித் தனியாக ஈடுபட்டு இருந்தோம். பிரதமர் சேலம் வந்த போது ஒரே மேடையில் இருந்தோம். நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த அங்கீகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாலையாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெய் பாலையா என தனித் தனியாக கொண்டாடி வருகிறோம்.
இதையும் படிங்க: சின்ன வயசில் இருந்து கொள்ளை பிரியம்..! 52 ஆண்டுகள் தவில் இசை பயணத்தில் எனக்கு பத்மஸ்ரீ விருது ; மகிழ்ச்சியில் தட்சிணாமூர்த்தி
டங்ஸ்டன் - மத்திய அரசு தான் காரணம்
டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து செய்யப்படுதற்கு மத்திய அரசு தான் காரணம் ஆனால் முதலமைச்சர் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள செல்வது அவருக்கு சிறிய சந்தோசம் செல்லட்டும் என்றார்.
பின்பு நடிகர் சரத்குமார் செய்தியாளர்கள் அளித்த பேட்டியில் ;
2026 -ம் ஆண்டு தமிழகத்தில் ஒரு சிறந்த ஆட்சியை அமைக்க பாடுபட சபதம் ஏற்போம் என்ற செய்தியை சொல்ல வேண்டும். டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசும் , அண்ணாமலையும் தான் காரணம்.
இதையும் படிங்க: MK Stalin : குடியரசு தினத்தில் முதல்வர் மதுரை வருகை.. அடுத்தடுத்து அரிட்டாபட்டி அப்டேட் !
விஜய் அவர்கள் குறித்து நான் அதிகமாக கருத்து சொல்வது இல்லை. ஆறு மாத காலம் அவர் களத்தில் இருந்த பிறகு என்ன செய்யப் போகிறார். கொள்கை ரீதியாக என்ன செய்யப் போகிறார். தமிழகத்தை வேறொரு பாதையில் எப்படி எடுத்து செல்ல போகிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நடிகர் விஜய் கவர்னரை ஏன் சந்தித்தார் ?
நடிகர் விஜய் முதல் மாநாட்டில் கவர்னர் இருக்க வேண்டாம் என சொன்ன பின்னர் கவர்னரை இதற்கு நேரில் சென்று சந்தித்தார் என தெரியவில்லை. தமிழகத்தில் 13 பேருக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

