மேலும் அறிய

Ponniyin Selvan: 'பொன்னியின் செல்வன்' இந்த இடத்தில்தான் எடுத்தாங்க ! கண்டிப்பா இங்க போயிட்டு வாங்க!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் புதுச்சேரியின் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி தளத்தில் எடுக்கப்பட்டது.

புதுச்சேரி: பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியாவின் பல பகுதிகளிலும், தாய்லாந்திலும் படமாக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ஒரு சில காட்சிகள் புதுச்சேரியின் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி தளத்தில் எடுக்கப்பட்டது.

ரோமாபுரி, கிரேக்கம் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தகம்

புதுச்சேரியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் அரியாங்குப்பத்தையொட்டி அரிக்கமேடு உள்ளது. ஆறும், கடலும் கலக்கும் கழிமுக பகுதியாக உள்ள இவ்விடத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு துறைமுகம் செயல்பட்டு வந்துள்ளது. இங்கிருந்து ரோமாபுரி, கிரேக்கம் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தக கப்பல்கள் சென்று வந்துள்ளன. இந்தியாவில் உள்ள பழங்கால முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. தற்போது அந்த இடத்தில் துறைமுகமும், கட்டடங்களும் முற்றிலும் அழிந்து கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது. இங்கு 1945ம் ஆண்டு முதன் முதலில் ராபர்ட் எரிக் மார்டீனர் என்பவர் தலைமையில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது துறைமுக மதில் சுவர், கட்டட துாண்கள், துறைமுகத்தின் இடிபாடுகள் போன்றவை புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும், ஐரோப்பியர்கள் பயன்படுத்திய முத்து போன்ற பொருட்கள் மற்றும் பல்வேறு பழங்கால பொருட்கள் புதைந்து கிடந்தது கண்டெடுக்கப்பட்டது.அதன்பிறகு 1989ம் ஆண்டு முதல் 1994 வரை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின்போது ஏராளமான வரலாற்று ஆதாரங்களாக பல்வேறு பொருட்கள் கிடைத்தன. அதன் மூலம் இந்த துறைமுகம் கி.மு.300 ஆண்டுகளில் இருந்தே செயல்பட்டு வந்ததும், கி.பி. 1800ம் ஆண்டு வரை முக்கியத்தும் வாய்ந்த பகுதியாகவே இருந்து வந்துள்ளது. அதன்பிறகு அழிந்தது தெரிய வந்தது.

இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிக்கமேடு, தற்போது பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளது. அங்கு நடைபெற்று வரும் மணல் கொள்ளையால், வரலாற்று சின்னங்கள் அழியும் நிலை உருவாகி உள்ளது.வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் மத்திய தொல்லியல் துறையோ அல்லது மாநில அரசோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தமிழகத்தில் அண்மையில் கீழடியில் நடந்த அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றி உள்ளது.

அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு

அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப்பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. பதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூணைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன. மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமாணிய காசு, மோதிரம், உறைகிணறுகள் ஆகியவையும் இங்கே கிடைத்தன.

அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாத படி மேட்டுப்பகுதியாக மாமரத்தோப்புகளாக மட்டுமே காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம், சிறு சிறு மணிகள் இவற்றை இன்றும் கீழே கிடப்பதைக் காணலாம். இந்த இடம் தான் பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெரும் கொற்றவை கோவில். நீங்கள் அரிக்கமேடுவிற்கு சுலபமாக சென்ற உடனே அதனை தெரிந்து கொள்வீர்கள்.

பொன்னியின் செல்வன் திரைப்படம்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கு தான் எத்தனை கோடி ரசிகர்கள், நாவல் எழுதி 80 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தாலும் இன்று வரை அதன் பெருமை பேசப்பட்டு வருகிறது. காரணம், அது சோழர்களின் பொற்கால ஆட்சியுடன் தொடர்புடைய ஒரு கதைக்களம். பல திரைப்பட இயக்குனர்களும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முதல் உலக நாயகன் கமலஹாசன் வரை பல நடிகர்களும் இந்த நாவலை திரைப்படமாக்க முயன்றனர். ஆனால் அதி வெற்றி கண்டவர் இயக்குனர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியாவின் பல பகுதிகளிலும், தாய்லாந்திலும் படமாக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ஒரு சில காட்சிகள் புதுச்சேரியின் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி தளத்தில் எடுக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
Embed widget