மேலும் அறிய

SPB Voice: AI மூலம் பயன்படுத்தப்பட்ட எஸ்.பி.பி., குரல்.. ஒருவாரமாகியும் ஓயாத ரசிகர்கள் விவாதம்

பிரதமர் மோடி தொடங்கி மறைந்த பிரபலங்கள், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபலங்களின் குரலை வேறு வேறு வீடியோக்களுக்கு பயன்படுத்துவது தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மறைந்த பாடகர் எஸ்பிபி குரலை பயன்படுத்தியதற்காக அவரது மகன் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் ஒருவாரம் கடந்த பின்னும் இன்னும் ரசிகர்களிடையே பேசுபொருளாகவே உள்ளது. 

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. பிரதமர் மோடி தொடங்கி மறைந்த பிரபலங்கள், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபலங்களின் குரலை வேறு வேறு வீடியோக்களுக்கு பயன்படுத்துவது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களிலும் பயன்படுத்தி விடுவது தான் சிக்கலாகி வருகிறது. 

இதன்மூலம் பிரபல நடிகைகளாக ராஷ்மிகா மந்தனா, கஜோல் உள்ளிட்டவர்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோக்களும் வெளியிடப்பட்டு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த தொழில்நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இப்படியான நிலையில் கடந்த வாரம்  மறைந்த பின்னணிபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலை அனுமதியின்றி தெலுங்குப் படமான கீதா கோலாவில் பயன்படுத்தியதற்காக இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாருக்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண் சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பினார். 

எஸ்பிபி குரல் பயன்படுத்தப்பட்ட விஷயத்தை கீடா கோலா இசையமைப்பாளர் விவேக் சாகரும் ஒப்புக் கொண்டார். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்த போதிலும், வணிக நோக்கங்களுக்காக குடும்பத்தினரின் அனுமதியின்றி செய்யப்பட்ட இந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியதாக எஸ்பிபி சரண் தெரிவித்திருந்தார். 

மேலும் இப்படியான நிலை தொடர்ந்து நீடித்தால் இசைத்துறையில் மதிப்புமிக்கவர்களாக இருக்கும் தற்போதைய மற்றும் வருங்கால பாடகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். முறைப்படி அனுமதி பெறாமல் தந்தையின் குரலை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு மற்றும் ராயல்டியில் பங்கு வேண்டும் எனவும் எஸ்பிபி சரண் கேட்டிருந்தார்

இந்த சம்பவம் ஒருவாரம் கடந்த நிலையில் தொடர்ந்து ரசிகர்களிடம் பேசுபொருளாக உள்ளது. 2020 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் எஸ்பிபி மறைந்த நிலையில் அவரது குரலை AI தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கேட்டது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Madhumitha: போலீஸ இடிச்சது உண்மை தான், ஆனால்... மதுபோதை சர்ச்சைக்கு மதுமிதா விளக்கம்!

தலைப்பு செய்திகள்

Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
Embed widget