மேலும் அறிய

வேலூரில் பரபரப்பு...பட்டப்பகலில் ஆசிரியரின் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

வேலூரில் பட்டப்பகலில் ஆசிரியரின் வீட்டில் 70 பவுன் நகை திருட்டுப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் தொரப்பாடி ராம்சேட்நகரை சேர்ந்தவர் பாலாஜி வயது (42). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மோகனப்பிரியா வயது (40), வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர்களுக்கு மகதி வயது (12) என்ற மகள் உள்ளார். பாலாஜி தனது தாயார் உஷாராணி மற்றும் மனைவி, மகளுடன் அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார்.பாலாஜி நேற்று அதிகாலை சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு சென்றார். அதனைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் உஷாராணி திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில் உள்ள கோவிலுக்கும், மோகனப்பிரியா 9 மணியளவில் வீட்டின் கதவை பூட்டிவிட்டு மூஞ்சூர்பட்டில் நடந்த கோவில் திருவிழாவை காண மகள் மகதியுடன் சென்றதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் பிற்பகல் 3 மணியளவில் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு உஷாராணி வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் உள்ளே மற்றும் படுக்கையறை வாசலில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைப்பெட்டிகள் ஆங்காங்கே காலியாக சிதறி கிடந்துள்ளது.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து உஷாராணி உடனடியாக பாலாஜி, மோகனப்பிரியா மற்றும் காவல்துறையினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாகாயம் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான காவல்துறையினர் விரைந்து அங்கு சென்று பார்வையிட்டு உஷாராணி மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே மோகனப்பிரியா வீடு திரும்பினார். அவரிடமும் காவல்துறையினர் விசாரித்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பாலாஜியின் குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை நன்கு அறிந்த அந்த பகுதியில் வசிக்கும் மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோவை திறந்து நகையை திருடியது தெரிய வந்தது. இதற்கிடையே திருப்பதிக்கு சென்ற பாலாஜி சாமி தரிசனம் செய்யாமல் மாலை 6.30 மணியளவில் வீடு திரும்பினார்.

 


வேலூரில் பரபரப்பு...பட்டப்பகலில் ஆசிரியரின் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிரண்ஸ்ருதி, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். சிறிதுநேரத்தில் மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது. மர்மநபர்களின் தடயங்களை மோப்பம் பிடித்த சாரா சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று தொரப்பாடி சுடுகாட்டின் அருகே நின்றது. நகையை திருடி விட்டு மர்மநபர்கள் சுடுகாட்டின் அருகே இருந்து வாகனம் மூலம் தப்பி சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூரில் பட்டப்பகலில் ஆசிரியரின் வீட்டில் 70 பவுன் நகை திருட்டுப்போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget