மேலும் அறிய

அடகு கடை சுவரை துளையிட்டு 26 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் அபேஸ் - வடமாநிலத்தவர் கை வரிசையா?

வந்தவாசி அடுத்த உள்ள அடகு கடையில் சுவற்றில் துளை இட்டு 65 சவரன் தங்கநகை, 3 கிலோ வெள்ளி நகைகள், 3லட்ச ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தெள்ளார் அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (60). இவர் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முன்பு உள்ள வணிக வளாகத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அடகு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கடையை திறப்பதற்கு வந்தபோது கடை முன்பு இருந்த கேமராக்கள் உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டாமல் இருந்தால் நிம்மதியுடன் கடையை திறந்தார். அப்போது கடையின் சுவற்றில் துளை இட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது இரும்பு பெட்டகத்தை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த 65 சவரன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி நகைகள், 3 லட்சம் மதிப்புள்ள  ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

அடகு கடை சுவரை துளையிட்டு 26 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் அபேஸ் - வடமாநிலத்தவர் கை வரிசையா?

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, ஆய்வாளர் சோனியா, குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் தணிக்கை வேல் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அடகு கடையில் பக்கத்தில் உள்ள இருசக்கர பழுதுபார்க்கும் கடையின் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு கடையில் உள்ளே இருந்த பீரோவில் வெல்டிங் வைத்துள்ளனர் அப்போது உடைக்க முடியாததால் லாக்கரை உடைத்து அதில் இருந்த நகை பணம் உள்ளவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் திருட்டு நடந்த அடகு கடை மற்றும் இருசக்கர பழுதுபார்க்கும் கடையில் தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பின்னர் மோப்பநாய் மியா வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அடகு கடை சுவரை துளையிட்டு 26 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் அபேஸ் - வடமாநிலத்தவர் கை வரிசையா?

அப்பொழுது மோப்பநாய் வந்தவாசி சாலையில் ஓடியது அங்கிருந்த வெல்டிங் கடையில் மோப்பம் பிடித்து நின்றது. அந்தக் வெல்டிங்கடையும் உடைத்து அதிலிருந்த பொருட்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு இரும்பு ஆயுதங்கள் உடன் வருவது  பதிவாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த திருட்டு சம்பவத்தில் வெளி மாநிலத்தினர் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுவதால் காவல்துறையினர் அனைத்து சோதனை சாவடிகளில் உள்ள அனைத்து கேமராக்களையும் சோதனையிட உள்ளதாகவும் மேலும் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை துவங்கி உள்ளதாகவும் கூடிய விரைவில் குற்றவாளியை கையும் களவுமாக கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தெரிவித்தார். அடகு கடையில் நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTV

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Embed widget