மேலும் அறிய
Vijay Vishwa: புயல் பாதிப்பால் கஷ்டப்பட்ட பழங்குடியினருக்கு உதவிய இளம் நடிகர் விஜய் விஷ்வா!
செஞ்சி அருகே புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியிருக்கு நடிகர் விஜய் விஷ்வா உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவியுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் விஷ்வா உதவி
1/4

மதுரையை சேர்ந்த நடிகர் விஜய் விஷ்வா ஆடுகளம், அட்டக்கத்தி, குட்டிப் புலி, சாகசம், டூரிங் டாக்கீஸ் உட்பட பல சினிமாக்களில் சிறு சிறு ரோல்களிலும், கேரளநாட்டிளம் பெண்களுடனே, தாயம், பிளஸ் ஆர் மைனஸ் திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
2/4

சமூக ஆர்வலரான இவர், ஃபெஞ்சல் புயலின் போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் அதிக கன மழை பொழிந்து வெள்ளம் ஏற்பட்டதில் செஞ்சியை அடுத்த அஞ்சாஞ்சேரி கிராமத்தில் சங்கராபரணி ஆற்றங்கரை ஓரம் குடிசைகளில் வசித்து வரும் பழங்குடியினர் உதவிகள் கிடைக்காமல் உள்ளதை செய்திகள் மூலமாக தெறித்து கொண்டார்.
3/4

உடனடியாக அஞ்சாஞ்சேரி கிராமத்திற்கு நேரில் வந்த நடிகர் விஜய் விஷ்வா, அங்கு வசிக்கும் 20 பழங்குடியினர் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், உடைகளை வழங்கினார்.
4/4

அவருடன் சமூக ஆர்வலர் தர்ஷினி சந்துரு, முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வமணி ஆகியோர் உடன் மக்களின் குறைகளை கேட்டு அறிந்துள்ளனர். புயலினால் பாதிக்கப்பட்ட அஞ்சாஞ்சேரி பழங்குடியினர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்பீம் திரைப்படம் எடுத்திருந்தனர். அதே படத்தில் அங்கு வசிக்கும் பழங்குடியினர்களும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 11 Dec 2024 12:05 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion