மேலும் அறிய

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் உலகின் மிக முக்கிய கடல்வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்று சேர்ந்து பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வாருகின்றன. இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி உட்பட பள்ளி மாணவிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா, துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளையில், ஈரானைத் தாக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் அமெரிக்காவுடன் கைகோர்த்திருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், ஈரான் மீதான தாக்குதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் என்று ட்ரம்ப் கூறியிருப்பதால், இது மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என்ற அச்சத்தையும் உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் மிக முக்கிய கடல்வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படை இதுகுறித்த தனது அறிவிப்பில், ``எந்தக் கப்பலாவது இதன் வழியே செல்ல முயற்சித்தால் தீக்கிரையாக்குவோம்" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஹோர்முஸ் நீரிணைக்கு வடக்கே ஈரானும், தெற்கே குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா, துபாய், கத்தார் ஆகிய நாடுகளும் இருக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டிதான் இந்த நாடுகளுக்கு கப்பல் வரவும் முடியும், இந்த நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் வெளியறவும் முடியும்.

ஹோர்முஸ் நீரிணையின் அகலம் சுமார் 33 மைல். ஆனால், இதில் இரு திசையிலும் 2 மைல் அளவுக்கு மட்டும்தான் கப்பல் வழித்தடம் இருக்கிறது.

இருப்பினும், உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 20 சதவிகித கச்சா எண்ணெய் இதன் வழியாகத்தான் ஏற்றுமதி செய்யப்டுகிறது.

தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் இந்த வழித்தடம் வழியாகத்தான் உலக நாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அதிகளவிலான கச்சா எண்ணெய் ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்றுமதியாகிறது.

மேலும், உலகின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி எரிவாயு ஏற்றுமதியில் 30 சதவிகித ஏற்றுமதி இந்த வழியாகத்தான் வர்த்தகமாகிறது.

குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளின் எல்.என்.ஜி எரிவாயு இந்த வழியாகத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மட்டுமின்றி, உணவுப் பொருள்கள், விவசாயப் பொருள்கள், கெமிக்கல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என பல்வேறு சரக்குகளும் இந்த வழியாகத்தான் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

இவ்வாறு உலக வர்த்தகத்தையே தன்னைச் சுற்றி வைத்திருக்கிறது ஹோர்முஸ் நீரிணை.

ஒருவேளை ஈரானின் எச்சரிக்கையின்படி ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டும்.

இதனால் கால தாமதம் ஏற்படுவது மட்டுமல்லாமல், கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் கடுமையாக உயரக்கூடும்.

சர்வதேச நிலவரப்படி தற்போது 70 முதல் 80 டாலருக்கு வர்த்தகமாகும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர் வரை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. 

அவ்வாறு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவிலும் எரிபொருள் விலையில் அது எதிரொலிக்கும். இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளும், குறிப்பாக கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பிரதான பொருளாதாரமாகக் கொண்ட வளைகுடா நாடுகளும் காடும் பாதிப்புக்குள்ளாகும்.

எனவே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு சளைக்காமல் ஈரானும் பாதிலடி கொடுத்து வருவதால், இந்தப் போரை பேச்சுவார்தை மூலம் சுமூகமாக முடிவுக்கு கொண்டு வருவதுதான் உலக வர்த்தகம் பதிக்குள்ளாவதிலிருந்து தடுக்கும்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" யாரிடமாவது சொன்னால் கொலை செய்திடுவேன் " சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரியாணி கடை ஓனர்
மத்திய அரசு வேலை: காந்திகிராம் GIRHFWT-ல் பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு!
மத்திய அரசு வேலை: காந்திகிராம் GIRHFWT-ல் பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு!
பழனி ரோப்கார் ஆன்லைன் முன்பதிவு: இனி வரிசையில் நிற்க வேண்டாம்!
பழனி ரோப்கார் ஆன்லைன் முன்பதிவு: இனி வரிசையில் நிற்க வேண்டாம்!
" 1098 உதவியால் தப்பிய சிறுமி " சிறுமியை கொடுமைப்படுத்திய பெண்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget