மேலும் அறிய

Fire Accident: ஈராக்கை உலுக்கிய கோர சம்பவம்: திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து..100 பேர் உயிரிழப்பு..ஷாக்!

ஈராக்கில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Fire Accident: ஈராக்கில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள அல்ஹம்தானியா மாவட்டத்தில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த திருமண நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் பட்டாசு வெடித்தும், விருந்து அளித்தும் கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது, தான்,  திருமண நிகழ்ச்சியில் திடீரென தீ பற்றியது. இந்த தீ மலமலவென பரவி திருமண மண்டபம் முழுவதும் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருந்தது.  இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் இறங்கினர். பின்னர், அங்கிருந்து 100 பேரின் உடல்களை சடலமாக மீட்டனர்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த 150க்கும் மேற்பட்டோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், மணமகனும், மணமகளும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தலைநகரான மொசூலுக்கு கிழக்கே உள்ள நகரமான ஹம்தானியாவில் உள்ள பிரதான மருத்துவமனையில் இரத்த தானம் செய்ய டஜன் கணக்கான மக்கள் வந்துள்ளனர். இதற்கிடையில், சம்பவ நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி தெரியவில்லை.  இருப்பினும், தீ விபத்தல் பட்டாசு வெடிக்கப்பட்டது தான் காரணம் என்று உள்ளூர் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஈராக் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இந்த சம்பவம் துரதிர்ஷடவசமானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவிக்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
"இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி" பரபரப்பை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
TN Rain Alert:ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
Embed widget