![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அதிர்ச்சி.. இளம்பெண்ணுக்கு 8 வயது சிறுவன் உட்பட மூவரால் பாலியல் தொந்தரவு.. போலீஸ் கொடுத்த ட்ரீட்மெண்ட்
இளம்பெண்ணை சிறுவர் ஒருவர் உட்பட மூன்று ஆண்கள் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![அதிர்ச்சி.. இளம்பெண்ணுக்கு 8 வயது சிறுவன் உட்பட மூவரால் பாலியல் தொந்தரவு.. போலீஸ் கொடுத்த ட்ரீட்மெண்ட் Liverpool: 8 year old boy warned by police after 'scary' sexual assault of woman in her doorway அதிர்ச்சி.. இளம்பெண்ணுக்கு 8 வயது சிறுவன் உட்பட மூவரால் பாலியல் தொந்தரவு.. போலீஸ் கொடுத்த ட்ரீட்மெண்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/04/86744f6d793d99eede02785d877e6447_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லிவர்பூல் பகுதியில் 21 வயது பெண் ஒருவர் மீது மூன்று ஆண்கள் பாலியல் ரீதியாக தொந்தரவளித்துள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பெண்,”கடந்த சில நாட்களுக்கு முன்பாக மூன்று ஆண்கள் என்னுடைய வீட்டிற்கு அருகே வந்தனர். அவர்களில் ஒருவன் சிறுவனாக இருந்தான். அவர்களில் முதலில் எனக்கு உதவி செய்வது போல் வந்தனர். நானும் அவர்கள் முதலில் பார்க்க நல்லவர்களாக இருந்ததால் அனுமதித்தேன். அதன்பின்னர் வேலைகளை முடித்துவிட்டு அவர்கள் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். அப்போது நான் உதவிக்காக அலறினேன். அந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் இருந்து ஓடினர்” எனக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அந்த மூன்று ஆண்களும் யார் என்பதை கண்டறிந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து காவல்துறை தரப்பில்,”பெண் ஒருவரை இரவு 10.30 மணி அளவில் மூன்று ஆண்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் வந்தது. அந்த புகாரில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அந்த விசாரணையில் 3 ஆண்கள் யார் என்பது தெரியவந்தது. அதில் ஒருவர் 8 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இந்த மூன்று பேரும் அந்தப் பெண்ணிற்கு உதவு செய்வது போல் வீட்டிற்குள் சென்று பின்பு அவருடைய உடையை தொட்டு கலட்ட முயற்சி செய்துள்ளனர். அந்தப் பெண் சத்தமிட்டு கூச்சல் செய்த பின்னர் அவர்கள் வீட்டில் இருந்து ஓடியுள்ளனர். இந்த மூன்று பேரையும் காவல்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக அந்த 8 வயது சிறுவனின் பள்ளி மற்றும் அவனுடைய பெற்றோர்களுக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரை கடுமையாக காவல்துறை எச்சரித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் உடனடியாக எங்களுடைய கவனத்திற்கு வரும் பட்சத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: இந்திய சீனப் பிரச்னை.. ஏரியின் குறுக்கே பாலம் கட்டும் சீன ராணுவம்.. அதிகரிக்கும் பதற்றம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)