மேலும் அறிய

அதிரடி ஆய்வில் இறங்கிய ஆட்சியர்... கதிகலங்கி நிற்கும் அதிகாரிகள்.. அரசு பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை

குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ததுடன், பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கழுப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்புத்துப்பட்டு ஊராட்சி, முதலியார்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி, முதலியார்குப்பம் மற்றும் செட்டிநகரில் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு, திடீர் ஆய்வு செய்தார்.

 மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்..., வானூர் ஊராட்சி ஒன்றியம், கழுபெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியினை நேரில் பார்வையிட்டு, சுற்றுச்சுவர் அமைப்பது, பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுமட்டுமல்லாமல், பழைய கழிப்பறை கட்டிடத்தினை அகற்றி புதிய கழிவறை மற்றும் குடிநீர் தொட்டி அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயார் செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை வசதி, சமையலறைக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர புதிய குடியிருப்பு வீடுகள்

 இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் , விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர புதிய குடியிருப்பு வீடுகள் கட்டுமானப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தனி வீட்டிற்கும் ரூ.5,31,750/- என 4 ஒருங்கிணைந்த குடியிருப்பு தொகுப்பிற்கு ரூ.21,27,000/- என மொத்தம் 440 வீடுகள் கட்டுவதற்கு ரூ.23.4 கோடி மதிப்பிட்டில் 300 சதுர அடி பரப்பளவில் நான்கு வீடுகள் ஒருங்கிணைந்த தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஒருங்கிணைந்த தொகுப்பு வீட்டிற்கு இடையில் 2.1 மீ இடைவெளியுடனும், 3.5 மீ சாலை வசதியுடன் வீடுகள் கட்டுமாப்பணிகள் நடைபெற்று வருகிறது. இக்குடியிருப்பில் படுக்கை அறை, சமையலறை, முகப்பு அறை (ஹால்), பின்புறமும் தனித்தனியாக கழிப்பறை மற்றும் குளியலறை வசதியுடன் கூடிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. குடியிருப்பு கட்டப்பட்டு வரும் பகுதி கடற்கரை ஒட்டிய பகுதி என்பதால் அதற்கேற்றாற்போல், சிமெண்ட், கம்பிகள் மற்றும் வண்ணப்பூச்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

90 சதவீதம் நிறைவு

மேலும், இக்குடியிருப்பு அமைந்துள்ள பகுதிகளில் மேல்நிலைநீர்த்தக்தொட்டி மூலம் குடிநீர் வசதி, பேவர் பிளாக் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, மின் கம்பம் வசதி, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, குடியிருப்பு வீடுகள் கட்டும் பணியானது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

அரசு பள்ளி அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு

தொடர்ந்து, மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், முதலியார்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியினை பார்வையிட்டு, மாணவர்களுக்கான மிதிவண்டி நிறுத்துமிடம், உணவருந்தும் கட்டடம் தேர்வு இடம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், பழுதடைந்த பள்ளி சுற்றுச்சுவரினை சீரமைத்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும், குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ததுடன், பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டது.

ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம்

இதனைத் தொடர்ந்து, மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், முதலியார்குப்பம் மற்றும் செட்டி நகரில், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் மீன்இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலியார் குப்பம் மற்றும் செட்டிநகர் மீன்பிடித் தொழிலில் முக்கிய மீனவ கிராமமாகும். முதலியார் குப்பம் மீனவ கிராமத்தில் 160 மீன்பிடி படகுகளும், 910 மீனவ மக்களும் மற்றும் செட்டி நகரில் 170 மீன்பிடி படகுகளும் 962 மீனவர்களும் உள்ளனர். இக்கிராமத்தில் மீன் இறங்குதள வசதி இல்லாததால், மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை திறந்த வெளியில் ஏலம் விடும் நிலை இருந்து வந்தது. இப்பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.7.0 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைத்திட உத்தரவிடப்பட்டதன் பேரில் பணிகள் துவங்கப்பட்டு 60 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது.

அந்த வகையில், முதலியார் குப்பத்தில், 1 மீன் வலை பின்னும் கூடம், 1 மீன் ஏலக்கூடம், 2 மீன் உலர்த்தும் தளம், 180 மீட்டர் உட்புற சாலை வசதி, 1 உயர்மின்கோபுர விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்றுபெறுவருகிறது. செட்டிநகரில், 1 மீன் வலை பின்னும் கூடம், 1 மீன் ஏலக்கூடம், 2 மீன் உலர்த்தும் தளம், 120 மீட்டர் உட்புற சாலை வசதி, 1 உயர்மின் கோபுரவிளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்தார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Monkeypox:  கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி.! தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்
Monkeypox: கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி.! தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்
”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள்  கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள் கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS | அடுத்தடுத்த ENCOUNTER நடுங்கும் ரவுடிகள்..அலறவிட்ட அருண் IPSRowdy Kakkathoppu Balaji Profile | டீனேஜில் தடம் மாறிய சிறுவன்..வட சென்னை DON-ஆன கதை!Chennai Rowdy kakkathoppu balaji encounter | ரவுடி பாலாஜி ENCOUNTER! சாட்டையை சுழற்றும் அருண்!Vijay on DMK, ADMK | திமுக எதிரி!அதிமுக குறி! விஜய் மாஸ்டர் ப்ளான்! பெரியார் அரசியல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Monkeypox:  கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி.! தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்
Monkeypox: கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி.! தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்
”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள்  கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள் கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
India Space Station: இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்துக்கு ஒப்புதல்..! எப்போது பயன்பாட்டுக்கு வரும் தெரியுமா.?
இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்துக்கு ஒப்புதல்..! எப்போது பயன்பாட்டுக்கு வரும் தெரியுமா.?
Brain Surgery and Jr NTR Movie : ஜூனியர் என்.டி.ஆர் படத்தை பார்த்தபடி, ரசிகைக்கு மூளை சிகிச்சை.. நடந்தது என்ன?
ஜூனியர் என்.டி.ஆர் படத்தை பார்த்தபடி, ரசிகைக்கு மூளை சிகிச்சை.. நடந்தது என்ன?
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
PBKS New Head Coach: பஞ்சாப் கிங்க்ஸின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!
பஞ்சாப் கிங்க்ஸின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!
Embed widget