மேலும் அறிய

Nadda Vs Karge: “அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இன்று மாநிலங்களவையில், காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவை, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கடுமையாக விமர்சித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பல்வேறு விவகாரங்களை வைத்து,  முதல் நாளிலிருந்தே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர். இச்சூழலில், இன்று பீகார் மாநில வக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா விமர்சித்தார். அவர் என்ன கூறினார் என்பதை தற்போது பார்க்கலாம்.

“நாடாளுமன்றம் அதன் நிலையை குறைக்கிறதா.?“ - கார்கே கேள்வி

நாடாளுமன்றத்தில், பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என  எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இன்றும் அது குறித்து வலியுத்தப்பட்டது. ஆனால், விவாதம் நட்தத அனுமதி மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த அவைத் தலைவரான ஜே.பி. நட்டா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பேசிய கார்கே, நாடாளுமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர்(CISF) குவிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் தங்களுடைய ஜனநாயக உரிமையை(போராட்டம்) செயல்படுத்தும்போது, இவ்வாறு சிஐஎஸ்எஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளது தங்களுக்கு அதிர்ச்சியையும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்றம் அதன் நிலையை குறைக்கிறதா.?  அதாவது அவையின் நடவடிக்கைகள் கீழிறங்கி விட்டனவா என்று கேட்ட அவர், இது ஆட்சேபனைக்கு உரியது என்றும் தெரிவித்தார்.

“அடுத்த 40 ஆண்டுகளுக்கு நீங்கள்(காங்கிரஸ்) எதிர்க்கட்சி தான்“

கார்கேவின் இந்த கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய பாஜக தேசியத் தலைவரும், அவைத் தலைவருமான ஜே.பி. நட்டா, அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்துவது ஜனநாயகமல்ல என்பதை நீங்களே தெளிவுபடுத்தி விட்டீர்கள் என கார்கேவை பார்த்து கூறினார்.

மேலும், நான் பேசிக் கொண்டிருக்கம்போது சிலர் எனதருகே வந்து கோஷம் எழுப்புவது என்பதும் ஜனநாயகம் அல்ல, பேச உரிமையுள்ள ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது இடையூறு ஏற்படுத்துவதற்காக இருக்கையில் இருந்து எப்போது அவர்கள் எழுகிறார்களோ, அந்த கணமே அவர்களுடைய ஜனநாயக சிந்தனை முடிவுக்கு வந்து விடுகிறது என பதிலளித்தார்.

அவை முறையாக நடப்பதற்கான வழி இது அல்ல எனக் கூறிய அவர், தான் அங்கே எதிர்க்கட்சியாக பல வருடங்கள் இருந்துள்ளதாகவும், அதனால், எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தன்னிடம் பயிற்சி எடுத்துக்கொள்ளுமாறு தான் கூறுவேன் என்றும்  கார்கேவை பார்த்து கூறினார்.

அதோடு, அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சியாகத் தான் இருக்கப் போகிறீர்கள், அதனால் தான் அப்படி கூறினேன் எனவும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.

“கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி“

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. அப்போதிலிருந்தே எதிர்க்கட்சிகள், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம் குறித்து விவாதிக்குமாறு கூறி அமளியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Embed widget