மேலும் அறிய

மன அழுத்தத்தில் தவிக்கும் மாணவர்கள்... சுற்றுலா அழைத்து செல்ல சூப்பர் திட்டம்

மாணவர்களை, குறிப்பாக CLAT தேர்வு எழுத உள்ளவர்களை, தஞ்சாவூருக்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி: மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக திருச்சி அரசு மாதிரி பள்ளி நிர்வாகத்தினர் ஒரு செம ஐடியா செய்துள்ளனர். என்ன தெரியுங்களா? ஒரு நாள் சுற்றுலாவாக மாணவர்களை அழைத்து செல்லும் திட்டம்தாங்க அது. 

மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து ஒரு நாள் சுற்றுலாவாக தஞ்சாவூர் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறையும் என்று ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் நம்புகின்றனர்.

திருச்சி அரசு மாதிரி பள்ளியில் இரண்டு மாதங்களில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் விடுதியில் தங்கி, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க பள்ளி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக,  மாணவர்களை, குறிப்பாக CLAT தேர்வு எழுத உள்ளவர்களை, தஞ்சாவூருக்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டு மாணவர்களும் CLAT தேர்வு எழுத இருந்தவர்கள். தற்போது, இந்த மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். எனவே, இந்த குழுவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. படிப்படியாக மற்ற பிரிவு மாணவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்

தற்கொலை சம்பவங்களை தடுக்க பள்ளி நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பள்ளியில் சுமார் 520 மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வாழ்க்கை மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்து சிறப்பு பேச்சாளர்களை அழைக்கவும், அரசு மனநல மருத்துவர் மற்றும் மனநல குழுவினரை 15 நாட்களுக்கு ஒருமுறை பள்ளிக்கு வரவழைத்து ஆலோசனை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களை அடிக்கடி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியில் நிரந்தர மனநல ஆலோசகர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  வேலூரைச் சேர்ந்த  மாணவர் பி. யுவராஜ் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தினார். முன்னதாக, ஜூன் மாதத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த டி. கிருத்திகா என்ற மாணவியும் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

ரூ.57 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த பள்ளி, போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்காகவே தொடங்கப்பட்டது. இந்த பள்ளியை மே 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த ஆண்டு மற்ற அரசு பள்ளிகளிலும் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம், புத்தூரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியின் விடுதியில் மாணவர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுபோன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க பள்ளி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் மனநலத்தை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் பள்ளி நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் இருப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கும். வெளியில் சுற்றுலாவாக செல்லும் போது பலதரப்பு இடங்கள், மனிதர்கள், இயற்கை சூழல் என்று மனம் மாறும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget