மேலும் அறிய

Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?

உத்தரகாண்டின் உத்தரகாசியில் திடீரென கங்கை நதியில் உண்டான பெருவெள்ளத்தால் தாராலி கிராமம் முற்றிலும் சிதைந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் தாராலி கிராமத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாயமான இந்த வெள்ளத்தில் உயிரிழப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. சுமார் 40 முதல் 50 வீடுகள் வரை அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம்:

திடீரென வந்த இந்த காட்டாற்று வெள்ளத்திற்கு மேகவெடிப்புதான் காரணம் என்று தகவல் வெளியாகி வருகிறது. அது உண்மையா? வேறு ஏதேனும் காரணமா? என்பதை கீழே காணலாம். பாதிப்பிற்கு ஆளான தாராலி கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 648 மீட்டர் அடி உயரத்தில் அமைந்துள்ளது. 


Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?

இந்த கிராமமானது அந்த மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. புவியியல் அமைப்பின்பிடி, ஆண்டு முழுவதும் பனிமூட்டம் காணப்படும். மலைகளும், பனிமூட்டமும் சூழ்ந்த இந்த கிராமம் அழகின் மறு உருவமாக காட்சி தருகிறது. இந்த உத்தரகாசி மாவட்டம் முழுவதும் வரிசையான உயர்ந்த மலைமுகடுகள், எப்போதும் நீரோட்டம் நிறைந்த வற்றாத நதிகள், ஆங்காங்கே பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளது.

மேகவெடிப்புதான் காரணமா?

உத்தரகாசியில் ஏற்பட்ட இந்த திடீர் காட்டாற்று வெள்ளத்திற்கு மேகவெடிப்புதான் காரணம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், உத்தரகாசி உள்பட உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

மேகவெடிப்பு என்றால் 10 கீ.மீ. சுற்றளவு பகுதியில் ஒரு மணி நேரத்தில் 100 மி.மீட்டர் மழைப்பொழிவு பெய்தால் மட்டுமே அதை மேகவெடிப்பாக கருத முடியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.


Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?

ஆனால், செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி உத்தரகாசியில் 2.7 மி.மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. அதேபோல, நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மேகவெடிப்பிற்கு  போதுமான அளவு மழைப்பொழிவும் பதிவாகவில்லை என்றே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், உத்தரகாண்டின் ஹரித்வாரில் மட்டும் நேற்று 300 மி.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

உத்தரகாசியைப் பொறுத்தமட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 1289 மி.மீட்டர் மழை பொழிவது வழக்கம் ஆகும். 1969ம் ஆண்டு 2 ஆயிரத்து 436 மி.மீட்டர் மழைப்பொழிவு பெய்ததே இதுவரை வரலாற்றிலே அங்கு அதிகம் பெய்த மழைப்பொழிவு ஆகும். ஜுலை மாதமே அங்கு மிகவும் அதிகளவு மழைப் பொழியும் மாதம் ஆகும். இந்த மாதத்தில் மட்டும் அங்கு 312 மி.மீட்டர் மழை பொழியும். 

மேகவெடிப்பு இல்லாவிட்டால் என்ன காரணம்?

மேலே கூறியபடி, உத்தரகாசியில்  பாதிக்கப்பட்ட தாராலி கிராமம் கங்கோத்ரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இயற்கையின் அழகு சூழ அமைந்துள்ள இந்த கிராமத்தில் ஆன்மீக பயணிகளும், சுற்றுலா பயணிகளும் தங்கிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 

பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க அவர்களின் வசதிக்காக கங்கை நதி பாயும் வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டு ஓட்டல்கள், விடுதிகள். உணவகங்கள் கட்டப்பட்டது. மெல்ல, மெல்ல அதிகரித்து நதியின் பாதையில் பாதி ஆக்கிரமித்து கட்டிடங்களாக கட்டி, கங்கை நதி பாயும் பாதையை குறுகலாக மாற்றிவிட்டனர். 

ஆக்கிரமிப்புகளை அடித்துச் சென்ற கங்கை:


Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?

தொடர்ந்து 3 நாட்களாக பெய்த மழை காரணமாக மலையின் மேலே இருந்து கீழ் நோக்கி பாய்ந்து வந்த கங்கை நதி பாய்வதற்கு போதியளவு இடம் இல்லாமல் நதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த உணவகங்கள், வீடுகள், விடுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை சூறையாடிச் சென்றுள்ளது.

ஆன்மீக பயணிகள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தை கண்டு அவர்ளுக்காக நதியின் பாதையை ஆக்கிரமித்து வணிக கட்டிடங்களையும், வீடுகளையும் கட்டிய மனிதனின் பேராசையும் இந்த கோர காட்டாற்று வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நிகழ்ந்ததும் இதுபோன்ற காரணத்தாலே ஆகும். தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள்  தீவிரமாக நடந்து வருகிறது. இடிபாடுகள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Nissan Kait SUV: இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
Embed widget