மேலும் அறிய

புல்லிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்ததை ஆசிரியர் கண்டித்ததால் எலி பேஸ்ட் சாப்பிட்டு மாணவன் தற்கொலை

’’நான் சாகப் போவதாகவும் எனது சாவிற்கு முழுக்க முழுக்க பள்ளி மட்டுமே காரணம் பள்ளி தலைமையாசிரியர் மட்டுமே காரணம் வேறு யாரும் காரணம் அல்ல என வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்’’

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்திலுள்ள அரசு பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்து வந்த மாணவனை முடி வெட்டி விட்டு வருமாறு கண்டித்ததால் எலி பேஸ்ட் சாப்பிட்டு நான் சாகப் போவதாகவும் அதற்கு பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளியும் தான் காரணம் என வீடியோ எடுத்து வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் லோகநாதன் இவரது மனைவி நீதா.  இருவரும் கொத்தனார் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு விஷ்வா மற்றும் விஷால் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். விஷால் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடியை வளர்த்து கொண்டு பள்ளிக்கு வந்த விஷாலை முடியை வெட்டிவிட்டு வருமாறு ஆசிரியர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு வந்த விஷாலை முடியை வெட்டி வரவில்லை என கண்டித்து,  பெற்றோரை அழைத்து வருமாறு  கூறியுள்ளனர். தன்னுடைய பெற்றோர் ஆலங்குடியில் கட்டிட வேலைக்கு சென்று விட்டதாகவும் நாளை வரும் போது அழைத்து வருவதாக விஷால் ஆசிரியர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


புல்லிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்ததை ஆசிரியர் கண்டித்ததால் எலி பேஸ்ட் சாப்பிட்டு மாணவன் தற்கொலை

ஆனால் முடி வெட்டாமல் வந்ததற்கு தண்டனையாக வகுப்பு வாசலில் நிற்குமாறு ஆசிரியர்கள்  விஷாலை வகுப்பை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர். மதிய இடைவேளை வரை வகுப்பு வாசலில் விஷால் நின்றுள்ளார். இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் அவரை கிண்டல் கேலி செய்ததால், விஷாலுக்கு அவமானம் ஏற்பட்டதால், மனவேதனையடைந்தார். இதனால் மதிய உணவு இடைவேளையின் போது வெளியே சென்று எலி பேஸ்ட் வாங்கி வந்த விஷால் வகுப்பறைக்குள் அமர்ந்து அதனை சாப்பிட்டுவிட்டு, மாணவர்களிடம் தான் எலி பேஸ்ட் மருந்தை சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். அப்போது  விஷாலுடன் படிக்கும் சில மாணவர்கள் விஷால் எலி மருந்தை சாப்பிட்டதை வகுப்பு ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பள்ளி தலைமையாசிரியர் சம்பத்துடன்,  விஷால் வீட்டிற்குச் சென்று பள்ளி சீருடையுடன் இருந்த விஷாலை வேறு கலரிலுள்ள சட்டையை அணியவைத்து அழைத்துச் சென்று கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே விஷாலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் விஷாலின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து ஆலங்குடியில் கட்டிட வேலையில் இருந்தவர்கள் பதறி அடித்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.


புல்லிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்ததை ஆசிரியர் கண்டித்ததால் எலி பேஸ்ட் சாப்பிட்டு மாணவன் தற்கொலை

அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விஷால்,  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவன் விஷால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது செல்போனில் நான் சாகப் போவதாகவும் எனது சாவிற்கு முழுக்க முழுக்க பள்ளி மட்டுமே காரணம் பள்ளி தலைமையாசிரியர் மட்டுமே காரணம் வேறு யாரும் காரணம் அல்ல என வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து திருநீலகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் சம்பத் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
Embed widget