மேலும் அறிய

தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!

இந்தியாவின் முதலாவது தேவாங்கு பாதுகாப்பு மையத்தைத் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தமிழக அரசு திறந்து வைத்துள்ளது.

வன உயிரினப் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும். சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் முன்னோடியாகத் திகழும் தமிழக அரசு, அழிந்து வரும் நிலையில் உள்ள 'தேவாங்கு' எனப்படும் அரிய வகை உயிரினத்தைப் பாதுகாக்க, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் சுமார் 16.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீனப் பாதுகாப்பு மையத்தை அமைத்துள்ளது. தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் இந்த மையத்தைத் திறந்து வைத்தார். மரங்களிலேயே தனது வாழ்நாளைக் கழிக்கும், பூச்சிகளை உண்ணும் பழக்கம் கொண்ட இந்தச் சிறிய பாலூட்டி இனத்தைப் பாதுகாப்பதில் இந்த மையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.


தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!

இந்த விழாவில், தேவாங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரத்யேக இணையதளம் மற்றும் ஒரு கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தேவாங்கு பாதுகாப்பு குறித்த நேரடித் தகவல்களைப் பெற முடியும். இந்த மையம் வெறும் அருங்காட்சியகமாக மட்டுமில்லாமல், ஒரு வாழும் ஆய்வகமாக செயல்படும். தேவாங்குகளின் வாழ்க்கை முறை மற்றும் சூழலியல் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளத் தகவல் தொடர்பு மையம் மற்றும் பார்வையாளர்கள் மையம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, சாகச மண்டலம் மற்றும் காடுகளுக்குள் பாதுகாப்பாகச் சென்று வரக் குறிப்பிட்ட நடைபாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!

சூழல், சுற்றுலாவை (Eco-tourism) மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்கள் வன வளங்களைச் சார்ந்து இருப்பதைத் தவிர்க்கவும் இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைத் தொடர்ந்து, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 11,806.56 ஹெக்டேர் நிலப்பரப்பு கடவூர் தேவாங்கு சரணாலயமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நவீனப் பாதுகாப்பு மையம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இரவில் மட்டுமே நடமாடும் பழக்கம் கொண்ட தேவாங்குகள், வாழிட இழப்பு மற்றும் சில மூடநம்பிக்கைகளால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.


தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!

மைசூர் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மேவா சிங் மற்றும் 'நியாஸ்' அமைப்பின் டாக்டர் சிந்து ராதாகிருஷ்ணா உள்ளிட்ட வனவிலங்கு நிபுணர்கள், இந்த மையம் தேவாங்குகளின் நடத்தையை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ளப் பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். சுற்றுலாப் பயணிகளையும் மாணவர்களையும் வரவேற்க இந்த மையம் இப்போது முழுமையாகத் தயாராக உள்ளது. அடுத்த தலைமுறைக்கு இயற்கையின் முக்கியத்துவத்தைக் கொண்டு செல்லும் "சுற்றுச்சூழல் போராளிகளை" உருவாக்க இந்த மையம் ஒரு அடித்தளமாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தரிசனம் !
திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தரிசனம் !
வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் நபர்கள் கவனத்திற்கு.. கசப்பான சம்பவங்கள் நடைபெற்றால் ரூ.1லட்சம் !
வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் நபர்கள் கவனத்திற்கு.. கசப்பான சம்பவங்கள் நடைபெற்றால் ரூ.1லட்சம் !
ஏழாம் ஆண்டாக அன்னதானம்.. வைகாசி விசாகம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நெகிழ்ச்சி !
ஏழாம் ஆண்டாக அன்னதானம்.. வைகாசி விசாகம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நெகிழ்ச்சி !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
Embed widget