மேலும் அறிய

தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!

இந்தியாவின் முதலாவது தேவாங்கு பாதுகாப்பு மையத்தைத் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தமிழக அரசு திறந்து வைத்துள்ளது.

வன உயிரினப் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும். சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் முன்னோடியாகத் திகழும் தமிழக அரசு, அழிந்து வரும் நிலையில் உள்ள 'தேவாங்கு' எனப்படும் அரிய வகை உயிரினத்தைப் பாதுகாக்க, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் சுமார் 16.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீனப் பாதுகாப்பு மையத்தை அமைத்துள்ளது. தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் இந்த மையத்தைத் திறந்து வைத்தார். மரங்களிலேயே தனது வாழ்நாளைக் கழிக்கும், பூச்சிகளை உண்ணும் பழக்கம் கொண்ட இந்தச் சிறிய பாலூட்டி இனத்தைப் பாதுகாப்பதில் இந்த மையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.


தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!

இந்த விழாவில், தேவாங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரத்யேக இணையதளம் மற்றும் ஒரு கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தேவாங்கு பாதுகாப்பு குறித்த நேரடித் தகவல்களைப் பெற முடியும். இந்த மையம் வெறும் அருங்காட்சியகமாக மட்டுமில்லாமல், ஒரு வாழும் ஆய்வகமாக செயல்படும். தேவாங்குகளின் வாழ்க்கை முறை மற்றும் சூழலியல் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளத் தகவல் தொடர்பு மையம் மற்றும் பார்வையாளர்கள் மையம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, சாகச மண்டலம் மற்றும் காடுகளுக்குள் பாதுகாப்பாகச் சென்று வரக் குறிப்பிட்ட நடைபாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!

சூழல், சுற்றுலாவை (Eco-tourism) மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்கள் வன வளங்களைச் சார்ந்து இருப்பதைத் தவிர்க்கவும் இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைத் தொடர்ந்து, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 11,806.56 ஹெக்டேர் நிலப்பரப்பு கடவூர் தேவாங்கு சரணாலயமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நவீனப் பாதுகாப்பு மையம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இரவில் மட்டுமே நடமாடும் பழக்கம் கொண்ட தேவாங்குகள், வாழிட இழப்பு மற்றும் சில மூடநம்பிக்கைகளால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.


தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!

மைசூர் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மேவா சிங் மற்றும் 'நியாஸ்' அமைப்பின் டாக்டர் சிந்து ராதாகிருஷ்ணா உள்ளிட்ட வனவிலங்கு நிபுணர்கள், இந்த மையம் தேவாங்குகளின் நடத்தையை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ளப் பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். சுற்றுலாப் பயணிகளையும் மாணவர்களையும் வரவேற்க இந்த மையம் இப்போது முழுமையாகத் தயாராக உள்ளது. அடுத்த தலைமுறைக்கு இயற்கையின் முக்கியத்துவத்தைக் கொண்டு செல்லும் "சுற்றுச்சூழல் போராளிகளை" உருவாக்க இந்த மையம் ஒரு அடித்தளமாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!
தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!
தமிழ்நாடு நாள்: பள்ளி மாணவர்களின் அசத்தல் வெற்றி, பரிசுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு நாள்: பள்ளி மாணவர்களின் அசத்தல் வெற்றி, பரிசுகள் அறிவிப்பு!
தஞ்சையில் பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தஞ்சையில் பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
Temples Trustees : 8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
Embed widget