மேலும் அறிய

தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!

இந்தியாவின் முதலாவது தேவாங்கு பாதுகாப்பு மையத்தைத் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தமிழக அரசு திறந்து வைத்துள்ளது.

வன உயிரினப் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும். சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் முன்னோடியாகத் திகழும் தமிழக அரசு, அழிந்து வரும் நிலையில் உள்ள 'தேவாங்கு' எனப்படும் அரிய வகை உயிரினத்தைப் பாதுகாக்க, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் சுமார் 16.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீனப் பாதுகாப்பு மையத்தை அமைத்துள்ளது. தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் இந்த மையத்தைத் திறந்து வைத்தார். மரங்களிலேயே தனது வாழ்நாளைக் கழிக்கும், பூச்சிகளை உண்ணும் பழக்கம் கொண்ட இந்தச் சிறிய பாலூட்டி இனத்தைப் பாதுகாப்பதில் இந்த மையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.


தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!

இந்த விழாவில், தேவாங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரத்யேக இணையதளம் மற்றும் ஒரு கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தேவாங்கு பாதுகாப்பு குறித்த நேரடித் தகவல்களைப் பெற முடியும். இந்த மையம் வெறும் அருங்காட்சியகமாக மட்டுமில்லாமல், ஒரு வாழும் ஆய்வகமாக செயல்படும். தேவாங்குகளின் வாழ்க்கை முறை மற்றும் சூழலியல் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளத் தகவல் தொடர்பு மையம் மற்றும் பார்வையாளர்கள் மையம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, சாகச மண்டலம் மற்றும் காடுகளுக்குள் பாதுகாப்பாகச் சென்று வரக் குறிப்பிட்ட நடைபாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!

சூழல், சுற்றுலாவை (Eco-tourism) மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்கள் வன வளங்களைச் சார்ந்து இருப்பதைத் தவிர்க்கவும் இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைத் தொடர்ந்து, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 11,806.56 ஹெக்டேர் நிலப்பரப்பு கடவூர் தேவாங்கு சரணாலயமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நவீனப் பாதுகாப்பு மையம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இரவில் மட்டுமே நடமாடும் பழக்கம் கொண்ட தேவாங்குகள், வாழிட இழப்பு மற்றும் சில மூடநம்பிக்கைகளால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.


தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!

மைசூர் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மேவா சிங் மற்றும் 'நியாஸ்' அமைப்பின் டாக்டர் சிந்து ராதாகிருஷ்ணா உள்ளிட்ட வனவிலங்கு நிபுணர்கள், இந்த மையம் தேவாங்குகளின் நடத்தையை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ளப் பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். சுற்றுலாப் பயணிகளையும் மாணவர்களையும் வரவேற்க இந்த மையம் இப்போது முழுமையாகத் தயாராக உள்ளது. அடுத்த தலைமுறைக்கு இயற்கையின் முக்கியத்துவத்தைக் கொண்டு செல்லும் "சுற்றுச்சூழல் போராளிகளை" உருவாக்க இந்த மையம் ஒரு அடித்தளமாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

சிவகங்கை: மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆட்சியர் ஆய்வு!
சிவகங்கை: மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆட்சியர் ஆய்வு!
தமிழ்நாட்டில் வெப்ப அலை: தாமத எச்சரிக்கை ஏன்? அரசுக்கு எம்.பி.யின் அவசர கோரிக்கை!
தமிழ்நாட்டில் வெப்ப அலை: தாமத எச்சரிக்கை ஏன்? அரசுக்கு எம்.பி.யின் அவசர கோரிக்கை!
விருதுநகர் NH 744: நில இழப்பீடு பெறாதோருக்கு சிறப்பு முகாம்!
விருதுநகர் NH 744: நில இழப்பீடு பெறாதோருக்கு சிறப்பு முகாம்!
கோயில் குளத்தில் தண்ணீர் எடுத்தால் பாவம்: கல்வெட்டு கூறும் கங்கை, ராமேஸ்வர பசு கொலைக்கு சமம்!
கோயில் குளத்தில் தண்ணீர் எடுத்தால் பாவம்: கல்வெட்டு கூறும் கங்கை, ராமேஸ்வர பசு கொலைக்கு சமம்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget