Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
தென்காசியில் அரசு விழா மேடையில் மூதாட்டி ஒருவர் திடீரென துணை முதல்வர் உதயநிதியின் காலில் விழுந்து அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் இ.சி.ஈஸ்வரன் பள்ளி மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் பயனாளிகளை மட்டும் அனுமதிக்கின்ற வகையில் சோதனைகள் செய்யப்பட்டு விழா மேடை அருகே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பயனாளி அட்டையுடன் திடீரென மூதாட்டி ஒருவர் விழா மேடையில் ஏறியதுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்து கண்ணீர் மல்க அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மூதாட்டி கூறுகையில்,
நான் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை பகுதியில் தனியாக வசித்து வருகிறேன்.எனது கணவர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் குழந்தைகள் இன்றி கடந்த 30 வருடங்களாக தனியாக தவித்து வருகின்றேன்.
மேலும் எனக்கு போதிய வருமானம் இல்லாததால் தனது வாழ்வாதாரத்தை கடப்பதற்கு மிக சிரமமாக உள்ளது. முதியோர் உதவித்தொகை வேண்டும் என பலமுறை மனு அளித்தும் எந்தவித பலனும் இல்லை. தமிழக அரசு சார்பில் வரக்கூடிய நலத்திட்ட உதவிகள் கிடைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி காலில் விழுந்து கெஞ்சியதாக தெரிவித்தார் இதைத்.தொடர்ந்து இதுகுறித்து தன்னிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்களுக்கான உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார்.























