மேலும் அறிய

சீர்காழி அருகே ஆறு கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

நகரங்களில் மட்டுமே தலைவிரித்தாடிய கொரோனா, தற்போது கிராமங்களிலும் நுழைந்துள்ளது. அதுமட்டுமின்றி தடை விதிக்கும் அளவிற்கு தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே கொரோனா தொற்று பரவலை தடுக்க  6 ஊராட்சிகளில்  பாதிக்கப்பட்ட பகுதிகளை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து நாளுக்கு நாள் மிக வேகமாக மக்களிடையே பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைந்த நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 102 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 ஆயிரத்து 131 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 722 பேர் வேதாரண்யம், நாகை, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையம், வீட்டு தனிமைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் மாவட்டத்தில்  இதுநாள் வரை 249 பலியாகியுள்ளனர்.

சீர்காழி அருகே ஆறு கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவை சேர்ந்த நல்லவிநாயகபுரம், எருக்கூர், உமையாள்பதி, அரசூர், திருமுல்லைவாசல், மாதிரவேலூர் உள்ளிட்ட 6 கிராமங்களில் கொரோனா தொற்றால் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் இப்பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கக்கோரி சுகாதாரத் துறை சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவின் பேரில்  இந்த 6 கிராமங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்தது. மேலும் தொற்று பரவாமல் தடுப்புகளை கொண்டு அடைத்து எச்சரிக்கை பதாகைகள் வைக்க உத்தரவிடபட்டுள்ளது.

சீர்காழி அருகே ஆறு கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ஆறு ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்றம் சார்பாக தினந்தோறும் கிருமி நாசினி தெளித்தல், குப்பைகள் எங்கும் தேங்காதவாறு அப்புறப்படுத்துதல், இந்த கிராமங்களில் 100 சதவீதம் முக கவசம் அணிவதை உறுதிபடுத்த ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து ஊரடங்கு செயல்பாட்டை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

சீர்காழி அருகே ஆறு கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

சீர்காழி தாலுகாவில் தங்களுக்கு தாங்களாகவே கட்டுப்பாடுகளை விதித்து தனிமைப்படுத்திக் கொண்ட கிராமங்களின் மத்தியில், அதே தாலுகாவை சேர்ந்த 6 கிராமங்கள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட சம்பவமும் நடந்தேறியுள்ளது. கொரோனாவின் மூன்றாம் அலை ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளாகவே சுய கட்டுப்பாடுகளுடன் சமூக விலகலை பின்பற்றி, முக கவசம் அணிந்து, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் மட்டுமே இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் காக்கப்படுவார்கள் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

கூட்டுப் பொருளாதாரத்தின் அடித்தளம்: தமிழர் திருமணங்களில் 'மொய்' வழக்கத்தின் பின்னணியும் அறிவியல் உண்மையும்!
கூட்டுப் பொருளாதாரத்தின் அடித்தளம்: தமிழர் திருமணங்களில் 'மொய்' வழக்கத்தின் பின்னணியும் அறிவியல் உண்மையும்!
’ஒருமுறை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு’ மகா பத்ரகாளியின் கோயிலின் பெருமைகள்..!
’துஷ்ட சக்திகளை துரத்தியடிக்கும் காளி’ வடுவூரில் குடமுழுக்கு..!
தஞ்சாவூரில் பெரும் அதிர்ச்சி, பரபரப்பு: ரூ.3 லட்சம் மதிப்பு கஞ்சாவுடன் பிடிப்பட்ட 2 பேர்
தஞ்சாவூரில் பெரும் அதிர்ச்சி, பரபரப்பு: ரூ.3 லட்சம் மதிப்பு கஞ்சாவுடன் பிடிப்பட்ட 2 பேர்
மறதியை வெல்லும் மந்திரம்: ஞானத்தின் வாசலைத் திறக்கும் லட்சுமி ஹயக்ரீவர் அருள்
மறதியை வெல்லும் மந்திரம்: ஞானத்தின் வாசலைத் திறக்கும் லட்சுமி ஹயக்ரீவர் அருள்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
US Iran Deal: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
Ather 450X Vs Honda Activa e: EV சந்தையை கலக்கும் 2 டாப் ஸ்கூட்டர்கள்; ஏதர் 450X-ஆ.? ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? சிறந்தது எது.? ஒப்பீடு
EV சந்தையை கலக்கும் 2 டாப் ஸ்கூட்டர்கள்; ஏதர் 450X-ஆ.? ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? சிறந்தது எது.? ஒப்பீடு
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
iPhone 17 Discounts: சூப்பர் ஆஃபர், அள்ளுங்க.! ஐபோன் 17 வரிசையில் வரிசையாக தள்ளுபடி.! எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு.?
சூப்பர் ஆஃபர், அள்ளுங்க.! ஐபோன் 17 வரிசையில் வரிசையாக தள்ளுபடி.! எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு.?
Embed widget