மேலும் அறிய

சீர்காழி அருகே ஆறு கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

நகரங்களில் மட்டுமே தலைவிரித்தாடிய கொரோனா, தற்போது கிராமங்களிலும் நுழைந்துள்ளது. அதுமட்டுமின்றி தடை விதிக்கும் அளவிற்கு தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே கொரோனா தொற்று பரவலை தடுக்க  6 ஊராட்சிகளில்  பாதிக்கப்பட்ட பகுதிகளை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து நாளுக்கு நாள் மிக வேகமாக மக்களிடையே பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைந்த நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 102 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 ஆயிரத்து 131 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 722 பேர் வேதாரண்யம், நாகை, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையம், வீட்டு தனிமைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் மாவட்டத்தில்  இதுநாள் வரை 249 பலியாகியுள்ளனர்.

சீர்காழி அருகே ஆறு கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவை சேர்ந்த நல்லவிநாயகபுரம், எருக்கூர், உமையாள்பதி, அரசூர், திருமுல்லைவாசல், மாதிரவேலூர் உள்ளிட்ட 6 கிராமங்களில் கொரோனா தொற்றால் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் இப்பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கக்கோரி சுகாதாரத் துறை சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவின் பேரில்  இந்த 6 கிராமங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்தது. மேலும் தொற்று பரவாமல் தடுப்புகளை கொண்டு அடைத்து எச்சரிக்கை பதாகைகள் வைக்க உத்தரவிடபட்டுள்ளது.

சீர்காழி அருகே ஆறு கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ஆறு ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்றம் சார்பாக தினந்தோறும் கிருமி நாசினி தெளித்தல், குப்பைகள் எங்கும் தேங்காதவாறு அப்புறப்படுத்துதல், இந்த கிராமங்களில் 100 சதவீதம் முக கவசம் அணிவதை உறுதிபடுத்த ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து ஊரடங்கு செயல்பாட்டை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

சீர்காழி அருகே ஆறு கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

சீர்காழி தாலுகாவில் தங்களுக்கு தாங்களாகவே கட்டுப்பாடுகளை விதித்து தனிமைப்படுத்திக் கொண்ட கிராமங்களின் மத்தியில், அதே தாலுகாவை சேர்ந்த 6 கிராமங்கள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட சம்பவமும் நடந்தேறியுள்ளது. கொரோனாவின் மூன்றாம் அலை ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளாகவே சுய கட்டுப்பாடுகளுடன் சமூக விலகலை பின்பற்றி, முக கவசம் அணிந்து, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் மட்டுமே இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் காக்கப்படுவார்கள் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
EPS:
EPS: "விஜய்தான் களவாணி.." தவெக ஆட்சியை தாறுமாறாக விமர்சித்த இபிஎஸ்!
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
CM Vijay Perambur: ”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
Embed widget