மேலும் அறிய

சீர்காழி அருகே ஆறு கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

நகரங்களில் மட்டுமே தலைவிரித்தாடிய கொரோனா, தற்போது கிராமங்களிலும் நுழைந்துள்ளது. அதுமட்டுமின்றி தடை விதிக்கும் அளவிற்கு தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே கொரோனா தொற்று பரவலை தடுக்க  6 ஊராட்சிகளில்  பாதிக்கப்பட்ட பகுதிகளை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து நாளுக்கு நாள் மிக வேகமாக மக்களிடையே பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைந்த நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 102 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 ஆயிரத்து 131 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 722 பேர் வேதாரண்யம், நாகை, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையம், வீட்டு தனிமைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் மாவட்டத்தில்  இதுநாள் வரை 249 பலியாகியுள்ளனர்.

சீர்காழி அருகே ஆறு கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவை சேர்ந்த நல்லவிநாயகபுரம், எருக்கூர், உமையாள்பதி, அரசூர், திருமுல்லைவாசல், மாதிரவேலூர் உள்ளிட்ட 6 கிராமங்களில் கொரோனா தொற்றால் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் இப்பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கக்கோரி சுகாதாரத் துறை சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவின் பேரில்  இந்த 6 கிராமங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்தது. மேலும் தொற்று பரவாமல் தடுப்புகளை கொண்டு அடைத்து எச்சரிக்கை பதாகைகள் வைக்க உத்தரவிடபட்டுள்ளது.

சீர்காழி அருகே ஆறு கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ஆறு ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்றம் சார்பாக தினந்தோறும் கிருமி நாசினி தெளித்தல், குப்பைகள் எங்கும் தேங்காதவாறு அப்புறப்படுத்துதல், இந்த கிராமங்களில் 100 சதவீதம் முக கவசம் அணிவதை உறுதிபடுத்த ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து ஊரடங்கு செயல்பாட்டை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

சீர்காழி அருகே ஆறு கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

சீர்காழி தாலுகாவில் தங்களுக்கு தாங்களாகவே கட்டுப்பாடுகளை விதித்து தனிமைப்படுத்திக் கொண்ட கிராமங்களின் மத்தியில், அதே தாலுகாவை சேர்ந்த 6 கிராமங்கள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட சம்பவமும் நடந்தேறியுள்ளது. கொரோனாவின் மூன்றாம் அலை ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளாகவே சுய கட்டுப்பாடுகளுடன் சமூக விலகலை பின்பற்றி, முக கவசம் அணிந்து, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் மட்டுமே இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் காக்கப்படுவார்கள் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு சிறப்பு
தஞ்சாவூரில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு சிறப்பு "கொலு விற்பனை" கண்காட்சி தொடக்க விழா
தஞ்சையில் தி.மு.க சார்பில் பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம்
தஞ்சையில் தி.மு.க சார்பில் பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம்
சப்தமங்கை தலங்களில் சிறப்பு பெற்ற பெருமை கொண்ட திருச்சக்கராப்பள்ளி தலம்
சப்தமங்கை தலங்களில் சிறப்பு பெற்ற பெருமை கொண்ட திருச்சக்கராப்பள்ளி தலம்
அரசு ஊழியர்களே... கவனிக்கவும்! உங்களுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசு ஊழியர்களே... கவனிக்கவும்! உங்களுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TMC: ரைட்ரா..! 15 ஆண்டுகள் ஆண்ட கட்சியின் பெயர், சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் - மம்தா பானர்ஜி ஷாக்
15 ஆண்டுகள் ஆண்ட கட்சியின் பெயர், சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் - மம்தா பானர்ஜி ஷாக்
TN Weather News: புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி..! 27 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி..! 27 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "குடும்ப கட்சியால் பெரியார் சிலையை கட்சி அலுவலகத்தில் வைக்க முடியாது.." திமுக-வை விளாசிய தவெக
Hiranandani: சென்னையில் 215 ஏக்கரில் ரூ.2,000 கோடியில் ப்ரீமியம் திட்டம் - 50 லட்சம் சதுர அடி பரப்பளவு, வேலைவாய்ப்பு
சென்னையில் 215 ஏக்கரில் ரூ.2,000 கோடியில் ப்ரீமியம் திட்டம் - 50 லட்சம் சதுர அடி பரப்பளவு, வேலைவாய்ப்பு
Kia Carens Clavis: கம்மி விலைக்கே 3 புதிய ஆட்டோமேடிக் வேரியண்ட்கள்..! 7 சீட்டரில் கியா அதிரடி - புது அம்சங்கள்?
கம்மி விலைக்கே 3 புதிய ஆட்டோமேடிக் வேரியண்ட்கள்..! 7 சீட்டரில் கியா அதிரடி - புது அம்சங்கள்?
Gold Rate Today : தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்.. சவரனுக்கு ரூ.1,160 உயர்வு- வெள்ளி விலையும் இவ்வளவு அதிகரிப்பா.!!
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்.. சவரனுக்கு ரூ.1,160 உயர்வு- வெள்ளி விலையும் இவ்வளவு அதிகரிப்பா.!!
MK Stalin:
MK Stalin: "தவெக அரசு படிக்கவைக்காவிட்டால் திமுக படிக்க வைக்கும்.." மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
DMK:
DMK: "மக்கள் வரிப்பணத்தில் இன்பச்சுற்றுலா போனீங்களா விஜய்?" முதலமைச்சருக்கு திமுக சரமாரி கேள்வி
Embed widget