மேலும் அறிய

திருவாரூரில் கே.பி பார்க் பாணியில் கட்டப்பட்டுவரும் நெல் கொள்முதல் நிலையம்

’’கடந்த 5 ஆண்டுகளாக இந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டுமானப்பணிகள் முழுமை பெறாமல் தற்போது வரை கட்டப்பட்டு வருகிறது’’

திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மணிகளை தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகம் உள்ளதால் அங்கு அடுக்கி வைக்கப்படும் நெல் மூட்டைகள் மலை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் முழுமையாக பாதிக்கப்படுவதால் அரசு பாதுகாப்பான கட்டிடங்கள் கட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. 

திருவாரூரில் கே.பி பார்க் பாணியில் கட்டப்பட்டுவரும் நெல் கொள்முதல் நிலையம்
அதனையொட்டி திருவாரூர் மாவட்டம் கோட்டுர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செருவாமணி கிராமத்தில் 659  ஏக்கர் விவசாய நிலமும், அருகில் உள்ள தாமரை பள்ளம், சிவனாண்டார் கோவில், மடபுரம், இலுப்பூர், விசாலாட்சிபுரம் உள்ளிட்ட 8 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் விளையும் நெல்மணிகளை விற்பனை செய்வதற்கு அங்கு உள்ள விவசாயிகள் செருவமணியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்காக கடந்த 2015-2016 ஆம் ஆண்டு 30 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்காக ஒப்பந்தம் செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது மேற்கூரை அமைக்கப்பட்டு நெல் சேமித்து வைக்க அறைகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த நெல் கொள்முதல் கட்டிடப்பணிகள் தற்போது வரை முழுவதுமாக கட்டி முடிக்கப்படவில்லை. இதுவரை கட்டப்பட்ட கட்டிடமும் தரமாக இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருவாரூரில் கே.பி பார்க் பாணியில் கட்டப்பட்டுவரும் நெல் கொள்முதல் நிலையம்
 
காரணம் புதிதாக கட்டப்பட்ட கொள்முதல் நிலையத்தின் சுவரை விரலால் சுரண்டினாலே சுவரில் உள்ள மண் பொல பொலவென கொட்டுகிறது. அடித்தளம் இடுவதற்கான கற்கள், எம்சாண்ட், போன்ற கட்டுமான பொருட்கள் தரமற்றதாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இங்கு கொள்முதல் நிலையம் கட்டி முடிக்கப்படாததால் அருகில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கில் மூட்டை ஒன்றுக்கு 2 ரூபாய் வாடகை கொடுத்து விவசாயிகள் தாங்கள் நெல் மூட்டைகளை பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டுமானப்பணிகள் முழுமை பெறாமல் தற்போது வரை கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்கவும், கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்யவும் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். எனவே நெல் கொள்முதல் நிலைய மண்டல மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த கட்டிடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget